Wednesday, October 18, 2006

கதை 10:கதிரேசன் கதை - பகுதி 1

"ஏனப்பா... இ இது என்னப் பாட்டு.. தமிழ் தானா.. கேகேட்டா ஒண்ணும் விளங்கல்ல்" குவாலிஸ் காரின் பின் சீட்டில் ஒய்யாரமாய் சாய்ந்துக் கொண்டு டிரைவரைக் கேட்டார் ஆனந்தன்.

"ஐயா இதுதானுங்க இப்போ ஹிட் பாட்டு..எளையராஜா மகன் போட்ட பாட்டுங்க,.. ஒரு ரெண்டு தடவைக் கேட்டா உங்களுக்கும் பிடிச்சுப் போகும்ங்க"

"அட என்னமோ போப்பா நமக்கெல்லாம் ககண்ணதாசன் எழுதி எம்.எஸ்.வி போட்டப் பாட்டுத் தான் பாட்டு மாதிரி இருக்கு..நீ சசவுண்ட்டைச் சசன்னமா வச்சுக்க.. இன்னும் ஊர் போறதுக்கு எவ்வளவு நேரமாகும்?"

ஆனந்தனுக்கு வயசு அம்பதுக்கும் சற்று இருக்கும், டிரைவருக்கு வயசு முப்பதுக்குள்ளே இருக்கும். ரசனையின் இடைவெளிக்கு இந்தக் காரணம் போதாதா? குவாலிஸின் முன்னால் பறந்தக் கட்சிக் கொடி, வண்டி நம்பர் பிளெட்டில் இருந்த என்ற ஒற்றை எழுத்து ஆனந்தன் அதிகார மையத்தின் பிரதிநிதி என்பதை சாமான்யர்க்ளுக்கு விளம்பரப்படுத்தியது.

"திண்டுக்கல் நெருங்கிட்டோம்ய்யா.. இன்னும் மூணு மூணரை மணி நேரத்துல்ல கொடைக்கானல் போயிரலாம்ய்யா.. அங்கிட்டு இருந்து ரோடு நல்லா இருந்தா மதியம் 3 மணிக்கு பூம்பாறைத் தாண்டிரலாம்..பூண்டி அங்கிருந்து பக்கம் தானே!"

"ஏம்ப்பா பூண்டி ரூட் உனக்கு நல்லா தெரியுது விசாரிச்சிகிட்டியா..முன்னாடி டிராவல்ஸ்க்கு ஓட்டுன்னப்போ வந்து இருக்கியோ?" டிரைவரின் பதிலை ஆனந்தன் எதிர்பார்க்கவில்லை.

"நான் லேசா தலையைச் சாச்சுக்கிறேன் நீ ஊர் கிட்ட வரும் போது எழுப்பி விடு" ஆனந்தன் கையைத் தலைக்குக் கொடுத்து இன்னும் வசதியாக இருக்கையில் சாய்ந்துக் கொண்டார்.

அதே சமயம் பூண்டி ஊராட்சி எல்லை.

"அமைச்சர் ஆனந்தன் அவர்களைப் பூண்டி பகுதி கழகம் வரவேற்கிறது" ஒவ்வொரு எழுத்தாய் கூட்டி வாசித்து முடித்த பாண்டி முகம் கோபத்தில் சிவந்துப் போனது.

"அந்தப் பெயிண்டர் பன்னி எங்கன இருக்கான்.. விளக்குமாத்து பயல்வளா.. அண்ணனுக்குச் செயல் புயல்ன்னு பட்டமிருக்குல்ல அது அந்த ...(படிப்பவர் ரசனைக் கருதி வார்த்தைகளை சென்சார் செய்கிறேன் &&&&& - என்று குறிக்கப்படும் இடங்கள் தணிக்கைச் செய்யப்பட்டவை என் அறிக) தண்ணியப் போட்டுட்டுச் செத்து ஓழிய வேண்டியது தானே.. செய்யச் சொன்ன ஒத்த வேலையை சொத்தயாப் பண்ணியிருக்கான்.. பாத்தா வெட்டிபுடுவேன்னு சொல்லு.. ஏய்.. கரகாட்டக் குரூப் மருதையிலே இருந்து வாந்தாச்சா..?"

"கொடைக்கானல் வந்துட்டாங்களாம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல்ல இங்கே இருப்பாய்ங்கண்ணே"

"செத்த மூதிகளா.. கட்டு கட்டா நோட்டை வேட்டிக்குள்ளே வச்சு அவுத்து விடல்ல.. வட்டிக்கு வாங்கிச் செலவு பண்ணிகிட்டு இருக்கேய்ன்.. நேரத்துக்கு வர்றல்ல.. இந்த மலைக்காட்டுல்ல கேரட் தோட்டத்துல்ல பொதைச்சுருவேன் சொல்லிட்டேன். ஆமா மாலைக்கும் கீரிடத்துக்கும் சொல்லியிருந்தெனே என்னடா ஆச்சு"

"ரெடிண்ணே, கவுஞ்சியிலே இருந்து ஆளு மாலையோடப் பொறப்பட்டாச்சுண்ணே"

"இந்தா &&&&&.. எதாவது நேரம் தப்பிச்சுன்னு வை வர்ற மாலை உன் சவத்துக்குத் தான் போடுவேன் பாத்துக்க...சமையல் ஒழுங்கு எல்லாம் பார்த்தியா...?"

"ஆச்சுண்ணே.. ரெடியாகிட்டு இருக்குண்ணே"

பாண்டி கட்சி அலுவலகம் நோக்கி நடந்தான். ஆபிஸ் வாசல்ல நுழையவும் வழ்க்கம் போல் தாஸ் வாத்தியாரின் இருமல் சத்தம் அவன் காதில் விழுந்து அவன் சிடுசிடுப்பை அதிகப்படுத்தியது.

"&&&&& அந்தக் கிழட்டு வாத்தியானை கொளுத்தி தொலைங்கடா.. &&&& எப்படியும் அவன் செத்தா அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரு &&&& கிடையாது.. அவன் போனா அவன் இருக்க வீட்டையும் ஆபிசோடச் சேத்து வளைக்கலாம்ன்னு பாக்குறேன்.. போவேனாப் பாருன்னு அடம் பிடிக்கிறான்"

அடுத்த சில மணி நேரங்களில் பூண்டி ஊராட்சி அமர்க்களப்பட்டது. தன் சொந்த அக்கா மகன் திருமணத்திற்கு வருகை தரும் அமைச்சர் ஆனந்தனை வரவேற்பதில் கழக கண்மணிகள் கடும் போட்டியில் இருந்தனர்.

"ஓங் கட்சிகாரங்க எல்லாம் ஒன்னிய வரவேக்க வேட்டிய இறக்கிவிட்டுகிட்டு ஊர் எல்லையிலே நிக்குறாய்ங்க.. நீ பூனை மாதிரி பதுங்கி உள்ளே வந்துருக்க..."

"அக்கா நான் ககட்சிக்காரனா வர்றல்ல ஒன் ததம்பியா ஓன் வீடு கல்யாணத்துக்கு இல்ல வந்து இருக்கேன்...எங்கண எம் மருமவளைக் காணும்.."

"இருக்கா காலத்துக்கும் சேத்து வச்சிருந்த வெக்கத்தை மொகத்துல்ல அப்பிகிட்டு பின்னால தான் நிக்கா.. அது கிடக்குது.. செம்பகம் வர்றல்லயா. வருவான்னு ஆசயா இல்ல இருந்தோம்"

ஒரு பெரூமூச்சு மட்டுமே பதிலாய் தந்தார் ஆனந்தன்.

"ஏன் தம்பி செம்பகம் இன்னுமா எல்லா விசயத்தையும் நினைப்பு வச்சுகிட்டு இருக்கு.. 30 வருஷம் ஓடிப் போயிருச்சு.. ஒங்களுக்கும் மூணு புள்ளக இருக்கு... என்ன த்ம்பி இது....?"


"யக்கா.. விவிசேசத்துக்கு வந்துருக்கேன் விசாரணைப் பண்ணிகிட்டு இருக்க.. இந்தூரூக்கு என் மூச்சு இருக்க வரைக்கும் வரக் கூடாதுன்னு நினைச்சேன்.. இப்போ ஒம் புள்ளக்கு ககலியாணம்ன்னு சொல்லி வர வச்சுட்ட... சரி..அந்தப் பேச்ச விடு.. ஆவுற வேலையைப் பாப்போம்"

ஆனந்தன் சொல்லிமுடிக்கவும் வாசலில் செயல் புயல் உள்ளிட்ட இதர பட்டப்பெயர்களோடு இணைக்கப்பட்ட ஆனந்தனின் பெயர் கொண்ட கோஷங்கள் பேரிரைச்சலாய் கேட்டது.பாண்டி தலைமையில் கட்சிக்காரகள் வீட்டுக்குள் நுழைய முண்டியடிக்க...வாசலுக்கு வந்தார் ஆனந்தன்

"ய்ப்பா நானே கட்சி ஆஆபிஸ்க்கு வர்றேன்யா.. கல்யாண வீட்டைக் ககட்சி மேடையாக்கிராதீயப்பா..."

"அண்ணனுக்கு நாட்டுக் கோழி குழம்பு, ஆட்டுக் கால் சூப்பு, நண்டு வறூவல், எறா, புறான்னு அம்புட்டு தயார் பண்ணி வச்சிருக்கோம்ல்ல எல்லாம் என் ஏற்பாடு தான்... இன்னும் கரகம் , ஓயிலாட்டம்ன்னு நிறைய ஏற்பாடு பண்ணியிருக்கோம்ல்ல..." பாண்டி தன் பிரதாபம் பேச...

"நான் ககவுச்சி சாப்பிடுறது இல்ல.. எதுக்கு இம்புட்டு ஏற்பாடு எல்லாம் வீணாப் பண்ணிகிட்டு... சரி சரி நீங்க ஆபிஸ்க்குப் போங்க நான் வர்றேன்.."

பாண்டி தலைத் தொங்கிப் போனது.

"அண்ணே சைவச் சாப்பாடும் ரெடி பண்ணியிருக்கோம் இல்ல... " பாண்டியின் எடுப்பு எடுத்துவிட பாண்டி முகம் பல்பாய் எரிந்தது.

"சரிய்யா ஓங்களோட வந்துச் சாசாப்பிடுறேன்.. எங்க வீட்டு ஆளுங்களை ரொம்ப நாள் கழிச்சுப் பாக்குதேன்.. பேசி இருந்துட்டு வர்றேன்ய்யா"

கட்சி ஆபிஸ் விருந்துக்கு பக்காவாய் தயார் ஆனது.

ஆனந்தன் அந்த வீதியில் நடக்கும் போது அவர் மனத்தில் என்ன என்னவோ எண்ணங்கள் ஓடின.

செண்பகத்தின் ஞாபகம் அவர் மனத்தில் அதிகமாய் வந்தது. செண்பகம் ஆனந்தனின் மனைவி. ஆனந்தன் மனத்தில் இப்போது தூளி கட்டி ஊஞ்சாலடியது அவ்ரோடு 30 வருடமாய் வாழ்ந்து வரும் அவர் மனைவி செண்பகம் அல்ல. முப்பது சொச்சம் வருடங்களுக்கு முன் தன் உயிரை விடவும் ஆனந்தன் அதிகமாய் காதலித்த அவர் அத்தை மகள் செண்பகம்.

அந்தச் செண்பகத்தை இதே வீதிகளில் எத்தனை நாள் ஆசையோடும் காதலோடும் இரண்டும் கலந்த ஒரு வித ஏக்கத்தோடும் பார்த்திருப்பேன் என நினைத்த வண்ணம் அந்த வீதியில் மெதுவாய் நடந்தார் ஆனந்தன்.

சின்ன வயசுல்ல ரெட்டை சடைப் போட்டுகிட்டு சுட்டித் தனமாய் சிறகடித்தப் பட்டாம்பூச்சி செண்பகம்.
பருவம் வந்ததும் தாவணியில் அழகியத் தீயாய் வலம் வந்த செண்பகம்
திருவிழா சமயங்க்ளில் தேவதையாய் தோழிகளோடு உலா வந்த செண்பகம்
கோலம் போடும் பொழுதுகளில் ஓவியமாய் செண்பகம்

இன்னும் தன் உள்ளத்தின் ஒவ்வோரு ஜன்னல் வழியாகவும் பார்த்துப் பரவசப்பட்ட செண்பகத்தின் ஒவ்வொரு பிம்பமும் ஆனந்தனின் ஒவ்வொரு செல்லையும் செல்லமாய் உசுப்பிவிட்டுப் போனது.

அந்த செண்பகம் இந்த வீதியில் தான் இன்னும் வாழ்கிறாள் என ஆனந்தன் எண்ணிக் கொண்டார். எண்ணங்களின் ஊடே ஆன்ந்தனின் பார்வை ஒரு வீட்டின் மேல் பதிந்து நின்றது. அந்த வீடும் அதன் கோலமும் ஆனந்தனை மேலும் முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தியது.
அந்த வீட்டுக்குள் இருந்து லொக் லொக் என்ற இருமல் சத்தம் தொடர்ந்து வந்தது.
வேலிகளில் முழுவதும் படர்ந்திருந்த காட்டுச்செடிகளும் உடைசலாய் விழுந்துக் கிடந்த வேலிக் கதவுகளும் அந்த வீட்டோடு வீட்டிலிருப்பவரின் நிலையையும் ஆனந்தனுக்கு அறிவித்தன.

"தாஸ் வாத்தியார் வீடு தானே இது...ஏன் இப்படி இருக்கு?"

"ஆனந்தனுக்குத் தெரியாதது இல்ல..பேச்சை நிறுத்தி பல வருசம் ஆச்சு... தாஸ் வாத்தியார் உடல் நிலைமையும் அவ்வளவு சீரா இல்ல..சாவுக்கு தான் இழுத்துகிட்டு கிடக்கார் ஆனாலும் எதோ ஒண்ணு அவரைச் சாகவிடாம தடுத்துகிட்டு இருக்கு... பழைய ஆளுங்களுக்கு அவரைப் பத்தி ஓரளவு தெரியும் இப்போ இருக்க இளந்தாரிகளுக்கு அவர் ஒரு சாகக் கிடக்கிற கிழவன்னு மட்டும் தான் தெரியும்...கவனிப்பு இல்ல"

"உனக்கு அவர் யார்ன்னு தெரியும் இல்ல...எனக்குச் சொல்லியிருக்கலாம் இல்ல...என்னய்யா நீங்க? "

"ஆனந்தா இனி ஒண்ணும் பண்ண முடியாது.. வெறும் கூடு தான் இருக்கு உசுரு எப்போ வேணும்ன்னாலும் பறந்துப் போகும்"

ஆனந்தன் கதவை மெல்ல நகர்த்தி விட்டு இருமல் வரும் திசை நோக்கி நகர்ந்தான். சத்தம் வந்த திசையில் பழைய பிரம்பு நாற்காலியில் பள்ளிக்கூட பயலாஜி லேப்களில் இருக்கும் எலும்புக் கூட்டினை ஒத்த மனித உருவம் ஒன்று இருமிக் கொண்டிருந்தது.

தாஸ் வாத்தியார் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனந்தன் அவர் முன்னால் சென்று மண்டியிட்டான். அவர் கையில் ஒரு சட்டம் போட்ட புகைபப்டம் இருந்தது.
அவர் கவனத்தைப் பெற முயன்ற ஆனந்தன் அவர் கையில் இருந்து அந்தப் படத்தை வாங்கினான்.

தாஸ் வாத்தியார் கண்கள் மெல்ல இவன் பக்கம் திரும்பின,. படத்தை திருப்பி அதில் உள்ள படம் தெரியும் படி பிடித்தார் ஆனந்தன்.

"ஆனந்தா இது கதிரேசன் படம்..."

ஆனந்தனின் கண்கள் நீர் வார்த்தது. அவசரமாய் கண்ணீரைத் துடைத்தார். தாஸ் வாத்தியார் கண்களில் அதிசயமாய் ஒரு புன்னகைப் பூத்தது. அதை யாரும் கவனிக்கவில்லை. ஆனந்தன் எழுந்துக் கொண்டான். வீட்டைச் சுற்றி ஒரு பார்வைப் பதித்தான்.

" தாஸ் வாத்தியார் இப்படி இருக்கக் கூடாது.. எவ்வளவு செலவு ஆனாலும் சரி... அவர் எப்படி வாழ்ந்தாரோ அப்படியே இந்த வீட்டை மாத்துங்க.. அவர் கடைசி காலம் இப்படி இருக்கக் கூடாது. உடனே செய்யுங்க" ஆனந்தன் குரல் கிட்டத் தட்ட உடைந்துப் போனது

"தோ பார்டா நாமளும் இந்த வீட்டை அடிக்க என்னவெல்லாமோச் செஞ்சோம்,...அமைச்சர் வந்தார்.. ஓடனே வேலையை ஆரம்பிச்சுட்டார். கிழவனைக் கவனிக்கிற மாதிரி கவனிச்சு அவன் போன ஓடனே வீட்டை அடிக்கிற திட்டமிது" பாண்டியின் ஈன மூளைக்கு இப்படியாகப் பட்டது

தாஸ் வாத்தியார் கண்கள் அசைந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. ஆனந்தன் மெதுவாய் வாசலை நோக்கி நகர்ந்தார்.

"ஆ..னன்ந்த் தா...." குழறியபடி வார்த்தை வந்த திசையில் தாஸ் வாத்தியார் நாற்காலி விட்டு எழுந்து நின்றுகொண்டிருந்தார்...

கதிரேசன் கதை - பகுதி 2

கதிரேசன் கதை - பகுதி 3

6 comments:

G.Ragavan said...

நல்லாயிருக்குய்யா கத. அடுத்த பாகத்துக்கு ரொம்ப ஆவலாக் காத்திருக்கேன்.

நெறைய சசுபெனுசுகள உள்ள பொதிச்சிருக்கீங்க....எப்படி எடுத்து விடுறீங்கன்னு பாப்போம்.

நாமக்கல் சிபி said...

ஆஹா... கதை அருமையா போயிட்டு இருக்குற இடத்துல தொடரும்னு போட்டுட்டீங்களே...

சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்க...

நாகை சிவா said...

போர் வாள், பின்னீட்டீங்க
சீக்கிரம் அடுத்த பகுதியை வெளியிடுங்க....

படிச்சுட்டு அப்புறமா கருத்து சொல்லாம்

கைப்புள்ள said...

தேவ்,
கதை படிக்கிறப்போ ஆவலைத் தூண்டுற மாதிரி இருக்கு. நல்லாருக்கு. அடுத்த பகுதியைச் சீக்கிரமாப் போடு.

கதிர் said...

நேத்திக்கு பாதி படிச்சுட்டு போனேன். இன்னிக்கு படிச்சுட்டு பாத்தா தொடரும் போட்டுட்டிங்களே தேவ்.

சீக்கிரம் அடுத்தது போடுங்க!

Unknown said...

இரண்டாம் பாகம் எடுத்து விட்டுருக்கேன்.. அதையும் படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க @ ஜி.ரா.

அடுத்த பாகம் போட்டாச்சு @ வெட்டி

அடுத்தப் பாகம் படிச்சிட்டீங்களா @ சிவா

உங்க ஆவலுக்குத் தீனிப் போட்டுருக்கா அடுத்தப் பகுதி சொல்லுங்க @ கைப்பு

உங்க கருத்து என்ன @ தம்பி