Wednesday, March 01, 2006

கவி 14: எனக்கொரு கனவு

எனக்கொரு
கனவு உண்டு

கல்லெறியப் பட்டுக்
காயப்பட்ட கனவு

உங்களால்
கேலிச் செய்யப்பட்டு
கண்ணீர் சிந்தும் கனவு

இருந்தும்...
அது
என் நம்பிக்கை

என் காயப்பட்டக் கனவுகளுக்கு
மருந்திடுவதே இப்போது எனக்கு
வாழ்க்கையாகிப் போனது

ஏனெனில்
எனக்குத் தெரியும்
என் கனவு
செத்துப் போன
மறுகணமே
நான் செத்துப் போவேன் என்று..

6 comments:

sathesh said...

நல்லாயிருக்கு தேவ்...

Unknown said...

பாழ்,
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

அழகான கனவு தேவ்

நேசமுடன்..
-நித்தியா

Anonymous said...

அழகான கனவு தேவ்

நேசமுடன்..
-நித்தியா

Unknown said...

நன்றி நித்யா... உங்க கனவு பற்றிய கவிதையை நான் மிகவும் ரசித்தேன். நன்றாக வந்துள்ளது.

Unknown said...

//உங்கள் கவிதைகள் எல்லாம் பொறுமையாக படித்தேன்.. நன்றாக எழுதுகிறீர்கள்... இன்னும் எழுதுங்கள்//

ஷாஜி உங்கள் பொறுமைக்கும் ... நீங்கள் கொடுத்திருக்கும் அன்பான ஊக்கத்திற்கும் மிக்க நன்றி..


//அந்த கும்மியடித்த விவரம் மட்டும் புரியவில்லை.. விளக்குவீர்களா?//


அந்த கும்மி மேட்டர் பெரிசா ஒண்ணுமில்ல.. பொயட்டரி.காம் தான்..