Tuesday, December 05, 2006

கதை11:அப்பா - பாகம் 2

அப்பா பாகம் 1

மறுபடியும் பஸ் கிளம்பிப் போகவும் நான் டீ குடிச்சு முடிக்கவும் சரியா இருந்துச்சு.


சென்னையிலே ஒரு சாப்ட்வேர் கம்பெனியிலே எனக்கு வேலைக் கிடைச்சு வாழ்க்கை ஒரு மாதிரி ஓட ஆரம்பிச்சது. ரஞ்சனியும் சென்னைக்கு வந்துட்டா, ஒரு அனிமேஷன் கம்பெனியிலே வேலைக்குச் சேர்ந்துட்டா. அப்புறம் என்ன எங்கள் காதல் நாளுக்கு நானூறு எஸ்.எம்.எஸ் முந்நூறு மிஸ்ட் கால், இரு நூறு ஈ மெயில்ன்னு எல்லா சாப்ட்வேர் மக்கள் காதல் மாதிரி ரொம்ப ஜோராவே வளர்ந்துச்சு.

ஒவ்வொரு நாளும் ரஞ்சனி என் வாழ்க்கையில் எனக்கு கடவுளால் கிடைத்தப் பொக்கிஷ்ம்ன்னு வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் என்னைப் பார்க்க ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க நபர் ஒருத்தர் என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் லேசாப் புன்னகைத்தார். அவர் முகத்தில் அந்த புன்னகையையும் மீறி ஒரு பயங்கர அழுத்தம் இருந்ததை என்னால சட்டுன்னு கவனிக்க முடிஞ்சது. கவனிச்சேன்.

"நீங்க தானே அஸ்வின்?"

"ஆமா.. ஆனா நீங்க யார்ன்னு எனக்குத் தெரியல்லயே? " என்று தாடையில் கை வைத்து சாக்ரட்டீஸ் போஸ் கொடுத்தேன்.

"நான் அப்பா.. ரஞ்சனியோட அப்பா.." என்று மறுபடியும் புன்னகைத்தார் அந்த மனிதர். நான் தடுமாற்றமாய் கைக்குலுக்கினேன்.

"உங்க் கூடக் கொஞ்சம் பேசணும்.." என்றார் ரஞ்சனியின் அப்பா.

"ஸ்யூர்..." என்ற படி அலுவலக நண்பனுக்கு ரிசப்ஷனில் இருந்து கால் செய்து அவசர வேலையா ஒரு மணி நேரம் வெளியே போறேன் அந்த மொக்கை மேனேஜரை எதாவதுச் சொல்லி சமாளிடான்னு சொல்லிட்டு ரஞ்சனியின் அப்பாவோடு கிளம்பினேன்.


அன்று மாலை ரஞசனியை நுங்கம்பாக்கம் காபி டேவில் சந்திக்கும் போது என் முகத்தில் சந்தோஷம் இல்லை.

"ரஞ்சு உண்மையாவே நீ என்னை லவ் பண்றீயா சொல்லு?"

"ஏன் நாலு வருஷமா வராத சந்தேகம் இப்போ திடீரென்னு வந்து இருக்கு.. உனக்கு என்னாச்சு?" அந்த மீன் கண்கள் என்னைக் கொக்கிப் போட்டப் படி பார்த்தன.

"ரஞ்சு நான் உங்க அப்பாவைப் பார்த்தேன்..பேசினேன்...உனக்கு அப்பா இல்ல செத்துப் போயிட்டார்ன்னு என் கிட்ட எதுக்காகச் சொன்ன?"
அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து திரும்பி கொண்டேன்.. ரஞ்சனி எதுவும் பேசாமல் கட கடவென எழுந்து காபி டேவை விட்டு வெளியே நடந்தாள்.

எனக்கு என்ன செயவது என்றே தெரியவில்லை.. காபி ட்ரேவோடு என் முன் நின்ற சர்வரின் பரிதாபப் பார்வை இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. காபிக்கான பணத்தை அவசரமாய் பர்சில் இருந்து எடுத்து அவனிடம் கீப் த சேஞ்ச் சொல்லிக் கொடுத்து விட்டு ரஞ்சனியைத் தேடி ஓடினேன். பார்க்கிங்ல் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டி பெப்ல் அவள் ஏறி உட்கார போன நேரம் நான் குறுக்கேப் போய் கைக் கட்டிக் கொண்டு நின்றேன்.

"என்னை அப்படிப் பார்க்காதே.. நான் அழுதுடுவேன் " என்றாள் ரஞ்சனி

" ஏய் ஏய் இப்போ எதுக்கு அழுவாச்சி...ஏய் ரஞ்சு"

ஸ்கூட்டியில் இருந்து இறங்கி வந்தவள் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

"ப்ளீஸ் எங்க அப்பாவைப் பத்தி என் கிட்ட பேசாதே.. " அவள் கெஞ்சல் பார்வையில் எனக்கு மொத்தமும் உருகிப் போனது.

நான் ரஞ்சனியைத் தான் காதலிக்கிறேன் அவங்க அப்பா கதை எனக்கு எதுக்குன்னு அப்படியே ரஞ்சனியின் அப்பாவோடு எனக்கு நடந்த சந்திப்பை மொத்தமாய் மறந்துப் போனேன். காதல் குறைகளை ஆராய்வதில்லை.. ஆராய் முற்படும் பொழுது அங்கு காதல் நிற்பதில்லை.

பின்னொரு நாளில் மெரீனாப் பீச்சில் ஒரு மாலைப் பொழுதினில் ரஞ்சனி நான் கேட்காமலேப் பேசினாள்...

"அஸ்வின்...எனக்கு ரெண்டு வயசா இருக்கும் போது எங்க அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டார்.."

"இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரா?"

"தெரியாது.. எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாங்க"

"எனக்கு அப்பாங்கற மனுஷன் தேவைப் படும் போது அவர் வர்றல்ல.. இப்போ அவர் எனக்குத் தேவையே இல்ல.. "

அப்பா என்ற உறவினை உதறி ஒதுக்கியதற்கானக் காரணத்தை ஒரே வரியில் சுருக்கமாய் சொல்லிவிட்டாள் ரஞ்சனி..

"எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணாலும் என்னை ஒதுக்கல்ல.. எதோ ஒரு ஹாஸ்ட்டல்ல சேத்து எதோ ஒரு வழியிலே எனக்குக் கரை சேர வழி காட்டுனாங்க...கண்ணன் சார் எனக்கு அப்பாவாக முடியல்லன்னாலும் ஒரு பாதுகாப்பாவது இருந்தார்"

"கண்ணன் சார் யார்?"

"எங்கம்மாவோட இரண்டாவது புருஷன்"

"அப்பாவாம் அப்பா.. எங்கேப் போனார்.. அவரைத் தேடி நான் காத்திருந்த சாயங்காலங்கள் எவ்வளவு தெரியுமா? ஒரு நாள் கூட அவருக்கு திரும்பி வர்ணும்ன்னு தோணல்லியே"
ரஞ்ச்னியின் கண்கள் கலங்கவில்லை. உதடுகள் ஒவ்வொரு மூறையும் அப்பா என்ற சொல்லை உச்சரிக்கும் போது துடித்தன.

நான் மௌனமாகவே இருந்தேன்.

"அஸ்வின் உனக்கு இது புரியாது .. இது இருபதைஞ்சு வருஷக் கோபம்... ஏக்கம்... தவிப்பு...வலி.. உறவுகள் வார்த்தையில் மட்டும் இல்ல.. அது ஒரு வாழ்க்கை அஸ்வின்.. பொறுப்புக்களைச் சுமந்து செய்யணும் அஸ்வின்.. இல்லன்னா HELL WITH ALL THE RELATIONS"

பீச்சில் சுண்டல் விற்றுக் கொண்டிருந்த பையன் ரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டு ஒரிரண்டு சுண்டல் பாக்கெட்டுகளைத் தரையில் சிதற விட்டான்.

அதுக்குப் பிறகு ரஞ்சனியிடம் அவள் அப்பாவைப் பற்றி பேசுவதைக் கூடுமானவரை தவிர்த்தேன். அதையும் மீறி எப்போதாவது அந்தப் பேச்சு வந்தால் ரஞ்சனியின் அப்பா கோபம் கூடியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.

இதற்கு பிறகு எனக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் நடந்தது. கண்ணன் சாரும் ரஞ்சனியின் அம்மாவும் வந்து ஆசிர்வதித்தார்கள். அவங்கப் பசங்க கூட வந்திருந்து வாழ்த்துனாங்க.. ரஞ்சனியின் அப்பாவும் என்னுடைய விருந்தாளியாய் வந்து மண்டபத்தின் ஒரு ஓரத்தில் நின்று எங்களை ஆசிர்வதித்தார்.

அதே ஊரில் எங்கள் இல்லறம் இனிதாய் தழைத்து ஓங்கத் துவங்கியது. சின்னச் சின்னச் சண்டைகள் அப்பப்போ ஊடல்கள் பின்னாடியே தொடரும் கெஞ்சல்கள் அப்புறம் கொஞ்சல்கள்ன்னு வாழ்க்கை நல்லாப் போச்சு.

ரஞ்சனிக்குத் தெரியாமல் மாதம் ஒரு முறை அவ அப்பாவை நான் போய் பார்த்துட்டு வர்றதை வழக்கமாக்கிட்டேன். ரஞ்சனிக்கும் அவ அப்பாவுக்கு உள்ள பல் ஒற்றுமைகளை என்னால உணர முடிஞ்சது... நாங்க நல்ல நண்பர்கள் ஆனோம்...எப்படியும் ஒரு நாள் ரஞ்சனியும் அவ அப்பாவையும் ஒண்ணு சேர்த்துடலாம்ன்னு நான் நம்பிகிட்டு இருந்தேன்..

இந்த நிலையிலேத் தான் எனக்கும் அவருக்குமான அந்தக் கடைசி சந்திப்பு நடந்துச்சு...

"அஸ்வின்.. தேங்க்ஸ்.. நீங்க எனக்குச் செயத் எல்லா விஷயங்களுக்கும் நன்றி"

அவர் இப்படி பேசும் போது எனக்கு ஒண்ணும் புரியல்ல. அவர் கையிலே ஒரு பழைய டைரி இருந்துச்சு. அதை என் கிட்ட நீட்டுனார். நான் அதை மறுக்காம வாங்கிகிட்டேன்.

"அஸ்வின் நான் அதிக நாள் இருப்பேன்ங்கற நம்பிக்கை எனக்கு இல்ல.. யூ நோ என் ஹெல்த் என்னுடையக் கன்ட்ரோல்ல இல்ல.. ஐ அம் டையிங்..." மறுபடியும் ஒரு புன்னகை.

"என்னுடைய வாழ்கையை நான் முடிக்கப் போறேன்.. ஆனா அதுல்ல முற்று புள்ளி அரையும் குறையுமாத் தான் இருக்கும்.. இந்த டைரி ரஞ்சனிக்கு நான் எழுதுனது.. ஆனா எந்தக் காரணம் கொண்டும அவ இதைப் படிக்கவோ பார்க்கவோ கூடாது.. என்னுடைய பாரத்தை உங்க மேல இறக்கி வைக்கிறேன்.. ஐ யாம் சாரி...."

"சார்.. உங்களுக்கும் ரஞ்சனிக்கும் ஏன் இந்த இடைவெளின்னு என்னால புரிஞ்சிக்க முடியல்ல.. நீங்க தப்பு பண்றவர் மாதிரியும் இல்ல...பட் இருந்தும்..." என நான் நீட்டி முழக்கினேன்.

"ரஞ்சனி அம்மாவை வேற பொண்ணுக்காக நான் விட்டுட்டு வர்றல்ல.. அவங்க அம்மா தான் என்னை இன்னொருத்தருக்காக விட்டுட்டுப் போயிட்டாங்க.." அதிராமல் அலட்டாமல் பேசினார் ரஞ்சனியின் அப்பா.

"கண்ணன் சாரா..." எனக்கு விக்கி வியர்த்துப் போச்சு.

"ப்ச் அது பத்தி பேச வேண்டாமே...தப்பு சரின்னு எதுவும் இல்ல...LET US GET ON WITH LIFE" மென்மையான குரலில் அமைதியாய் சொன்னார். புன்னகைக்க முயன்றார். அவர் முகம் மேலும் விகாரமடைந்தது.

அப்புறம் அவரோட சதாம் உசேன்ல்ல இருந்து இந்தியன் கிரிக்கெட் வரை பல விஷயங்கள் பேசிகிட்டு இருந்துட்டுக் கிளம்புனேன்.

அதுக்கு பிறகு இப்போ தான் அவரைப் பாக்கப் போறேன்...ஆனா அவர் என்னைப் பார்க்கப் போறதும் இலல் பேசப் போறதும் இல்ல..... கண் முழிச்சுப் பார்த்தப்போ பஸ் சேலம் புறநகரை அடைந்திருந்தது.

அவர் கொடுத்த டைரியை பையிலிருந்து எடுத்துத் திறந்துப் பார்த்தேன்...

அதில் ரஞ்சனிக்கு அவர் சேர்த்து வைத்திருந்த சொத்து விவரம்... ரஞசனியின் எல்.கே.ஜி காலம் முதல் கல்லூரி காலம் வரை அவள் அம்மா அவளுக்குச் செய்ததாய் ரஞ்சனி இந்த நிமிடம் வரை நம்பிக் கொண்டிருக்கும் அனைத்துச் செலவுகளுக்கான கணக்குகளும் தேதி வாரியாக தக்க ஆதாரங்களோடு இணைக்கப் பட்டிருந்தன...

கடைசி பக்கத்துல்ல அவரோடக் கையெழுத்தில்...

ரஞ்சு நான் உலகத்தின் சிறந்த அப்பாவா இல்லாமப் போயிருக்கலாம் ஆனா நீ நினைக்கிற அளவுக்கு மோசமான அப்பா இல்லம்மா....

எனக்குள் என் உணர்வுகளை அடக்க முடியவில்லை.. என் கிட்ட எதுக்கு இந்த டைரியைக் கொடுக்கணும்.. கொடுக்காமப் போயிருக்கலாமே.. இந்த சுமையை நான் எதுக்கு சுமக்கணும்....

எங்கிருந்தோ ரஞ்சனி அப்பாவின் குரல் என் காதில் கேட்டது...

"அஸ்வின்.. இனிமே நீ தானப்பா ரஞ்சனிக்கு அப்பா.... என்னுடைய அன்பையும் சேர்த்து அவளுக்குக் கொடுப்பீயா"

என்னப் பதில் சொல்வேன்...I THINK I HAVE A LIFE TIME TO ANSWER THAT QUESTION...!!!

30 comments:

Anonymous said...

"Kaadhal kuraigalai aaraivathillai, aaraya murpadumpozhuthu angu kaadhal nirpathillai" ithu enakku romba piditha varigal dev. story romba nalla irunthathu keep it up. rasigai :)))))))

நாமக்கல் சிபி said...

அருமையா எழுதியிருக்கீங்க தேவ்!!!
உங்க கதை ஒவ்வொன்றும் ஒரு வித வலியையும், வாழ்க்கையில் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் விடை கிடைக்காது என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

இலவசக்கொத்தனார் said...

கதை நல்லா இருந்தது. அந்த அப்பாவின் டைரியில் இருந்து இன்னும் கொஞ்சம் விபரங்கள் எழுதி இருக்கணும். அங்க கொஞ்சம் அழுத்தம் குறைந்து போன மாதிரி தோணுது.

மழைக்காதலன் said...

அருமையான கதை தேவ், மிக அருமை, வாழ்த்துக்கள்

Unknown said...

//"Kaadhal kuraigalai aaraivathillai, aaraya murpadumpozhuthu angu kaadhal nirpathillai" ithu enakku romba piditha varigal dev. story romba nalla irunthathu keep it up. rasigai :))))))) //

நன்றி ரசிகை.. வரிகளை ரசித்துப் பாராட்டியதற்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல் நன்றி

Unknown said...

//அருமையா எழுதியிருக்கீங்க தேவ்!!!//
நன்றி பாலாஜி

//உங்க கதை ஒவ்வொன்றும் ஒரு வித வலியையும், வாழ்க்கையில் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் விடை கிடைக்காது என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.//

உண்மை தான் பாலாஜி.. என்னுடைய எல்லைக்குள் நான் சந்திக்கும் நபர்கள் மற்றும் சம்பவஙக்ளே என் கதையின் ஆக்கங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன... அவற்றை நான் பார்த்தக் கோணத்தில் உங்களோடு பகிர்கிறேன் :) தொடர்ந்து வந்து உங்க கருத்தினைச் சொல்லுங்க..

Unknown said...

//கதை நல்லா இருந்தது.//

நன்றி கொத்ஸ்


//அந்த அப்பாவின் டைரியில் இருந்து இன்னும் கொஞ்சம் விபரங்கள் எழுதி இருக்கணும். அங்க கொஞ்சம் அழுத்தம் குறைந்து போன மாதிரி தோணுது. //

நானும் இதை யோசிச்சேன் கொத்ஸ்.. ஓவரா டைரியைத் திறந்துக் காட்டுனாப் படிக்கறவங்களுக்கு போர் அடிச்சிடுமோன்னு ஒரு சின்ன தயக்கம் காரணமா அந்தப் பகுதியைக் கொஞ்சம் சுருக்கிட்டேன்.

Unknown said...

//அருமையான கதை தேவ், மிக அருமை, வாழ்த்துக்கள் //

நன்றி சார்லஸ்

Divya said...

\"காதல் குறைகளை ஆராய்வதில்லை.. ஆராய் முற்படும் பொழுது அங்கு காதல் நிற்பதில்லை\"

நச்சென்று மனதில் பதிந்தன இந்த வரிகள்.

கதையினை படித்து முடிக்கும் போது, கண்களில் வழிந்த நீரை ஏனோ கட்டு படுத்த முடியவில்லை,

அருமையான, யதார்த்தமான எழுத்து நடையுடன் நல்ல கதை தேவ், பாராட்டுகள்.

Unknown said...

//\"காதல் குறைகளை ஆராய்வதில்லை.. ஆராய் முற்படும் பொழுது அங்கு காதல் நிற்பதில்லை\"

நச்சென்று மனதில் பதிந்தன இந்த வரிகள்.

கதையினை படித்து முடிக்கும் போது, கண்களில் வழிந்த நீரை ஏனோ கட்டு படுத்த முடியவில்லை,

அருமையான, யதார்த்தமான எழுத்து நடையுடன் நல்ல கதை தேவ், பாராட்டுகள். //

நன்றி திவ்யா

Unknown said...

//Very Nice Story & well Written.

Thanks. //


நன்றி ஏலியன்

Anonymous said...

காதல் குறைகளை ஆராய்வதில்லை.. ஆராய் முற்படும் பொழுது அங்கு காதல் நிற்பதில்லை.


holy crap...dude that was awesome....maybe I learned something valuable today...how in the hell can you write stories like this and be modest...its brilliant man....you gotta go to mainstream media like vikatan. Blog is too small for you.

In most of your stories u name the lady character 'Ranjani'....whats the true story behind that name...is it a sad story or a happy one?

சேதுக்கரசி said...

ரொம்ப நல்லா இருக்கு கதை. சூப்பர் எழுத்தாளர் போல?

Santhosh said...

தேவ்,
கதை நல்லா இருந்தது தேவ்.

Unknown said...

//holy crap...dude that was awesome....maybe I learned something valuable today...how in the hell can you write stories like this and be modest...its brilliant man....you gotta go to mainstream media like vikatan. Blog is too small for you. //

Wyvern, Thanks for your nice words man.. It really elevates my spirits. Thnaks again

//In most of your stories u name the lady character 'Ranjani'....whats the true story behind that name...is it a sad story or a happy one? //

Nothing so special about the name.. I just like that name.. its pretty attractive nah..:)

Unknown said...

//ரொம்ப நல்லா இருக்கு கதை.//
நன்றி சேதுக்கரசி

// சூப்பர் எழுத்தாளர் போல? //

ஆகா அப்படி எல்லாம் இல்லங்க.. எதோ தெரிஞ்சதை எழுதுறேங்க..அதைப் படிச்சுட்டு உங்களை மாதிரி ஒரு நாலு பேர் பாராட்டுனால்லெ போதும்ங்க...

Unknown said...

//கதை நல்லா இருந்தது தேவ். //

நன்றி சந்தோஷ்.

Anonymous said...

அருமை தேவ்!
இன்றிலிருந்து நானும் உங்கள் வாசகன்.
(வானம்பாடி -கலீஸ்-)

Unknown said...

வாங்க கலீஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்னொரு நண்பர் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

நவீன் ப்ரகாஷ் said...

மனசு கனத்துப்போனது தேவ்!! சில உணர்வுகளை சிலரால் மட்டுமே மனதை தொட எழுத முடியும் .அத்தகைய வரம் கைவரப் பெற்றிருக்கிறீர்கள் தேவ் !! வாழ்த்துக்கள் !! :))

கைப்புள்ள said...

மச்சி,
சிம்ப்ளி சூப்பர்ப்டா. ஒரு அருமையான அழுத்தமான திரைப்படத்தைப் பார்த்த உணர்வு இந்த கதையைப் படிச்சதும் கெடைச்சது. ஒரு தேர்ந்த எழுத்தாளர் போன்ற நடை.

//"ஸ்யூர்..." என்ற படி அலுவலக நண்பனுக்கு ரிசப்ஷனில் இருந்து கால் செய்து அவசர வேலையா ஒரு மணி நேரம் வெளியே போறேன் அந்த மொக்கை மேனேஜரை எதாவதுச் சொல்லி சமாளிடான்னு சொல்லிட்டு ரஞ்சனியின் அப்பாவோடு கிளம்பினேன்.


அன்று மாலை ரஞசனியை நுங்கம்பாக்கம் காபி டேவில் சந்திக்கும் போது என் முகத்தில் சந்தோஷம் இல்லை.//

காட்சிகளைச் சொற்களாய் வடிக்கும் திறமையும் அருமை. Way to go. Keep it up நண்பா!!!

Unknown said...

//மனசு கனத்துப்போனது தேவ்!! சில உணர்வுகளை சிலரால் மட்டுமே மனதை தொட எழுத முடியும் .அத்தகைய வரம் கைவரப் பெற்றிருக்கிறீர்கள் தேவ் !! வாழ்த்துக்கள் !! :))//

நன்றி நவீன்

Unknown said...

//Way to go. Keep it up நண்பா!!! //

லேட்டான விமர்சனம் இருந்தாலும் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்

நன்றி கைப்புள்ள

Karthik Jayanth said...

//காதல் குறைகளை ஆராய்வதில்லை.. ஆராய் முற்படும் பொழுது அங்கு காதல் நிற்பதில்லை //

I know, i am late in this comments race but still ,

Way to go Bro. keep it up.

Unknown said...

வாங்க நெருப்பு சிவா,

//காதல் இல்லாமல் கதையே இல்லையா? ஐயகோ//


நேரமிருந்தால் என்னுடைய இந்தக் கதைகளைப் படிச்சுப் பாருங்களேன்.. படிச்சுட்டுக் கருத்துச் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் நன்றி.

ஒரு அம்மாவின் டைரிக் குறிப்பு.
என் பழையப் பனையோலைகள்

Unknown said...

//I know, i am late in this comments race but still ,

Way to go Bro. keep it up. //

Thanks Karthick :)

MyFriend said...

உங்கள் கதைகள் என்னை மிகவும் கவர்ந்தது. உங்களுடைய எல்லா பதிவுகளையும் ப்ரின்ட் செய்து ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன்.

உங்கள் கதைகள் என் மனதில் ஏத் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. என்ன மாற்றம் என்று சரியாக சொல்ல தெரியவில்லை..

ஆனாலும் ஒவ்வொரு கதையிலும் ஏதொ ஒரு விஷயம் என்னை வெகுவாக பாதித்துள்ளது. என்னால், கதைகள் எழுத முடியவில்லையே என்ற வருத்தமும் உள்ளது.

இன்னும் நிறைய எழுதுங்கள். உங்கள் கதைகளை படித்துதான் நான் கதைகள் எழுதுவது எப்படி என்று பாடம் படிக்க வேண்ந்டும் தேவ். ;-)

Deekshanya said...

alagu - veru varthai solla theriyavillai!

-Deeksh

Unknown said...

//alagu - veru varthai solla theriyavillai!//


தீக்ஷன்யா பாராட்டுக்களுக்கு நன்றி... நேரம் கிடைக்கும் போது பக்கம் 78இன் மத்த கதைகளையும் படிங்க..

SierrA ManiaC said...

Of all the stories I have read by you, this is the one that touches me . I would have read this most probably more than twenty times and I still come back to read it again and again.

Most probably because of lot of things may be the hair falling in front carries some kind of sentiment to me or the way the characters are presented or may be the way the story evolved and got finished.

Don't know but I really wish to read more of your writing. Its been more than a year and a half and please you can restart your writing.