Saturday, February 25, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 8

இது வரை

மூணு நாள் வீட்டுச் சாப்பாடு அம்சமா இருந்துச்சு...அம்மா சாப்பாட்டுல்ல எப்பவும் அன்பு இருக்கும் அதுவும் எனக்குன்னு ஒரு படி அதிகாமவே
இருக்கும்..அது தான் அந்த ருசிக்கான ரகசியம்

நம்ம விசிட்க்காக அம்மா மார்கெட்ல்ல சொல்லி நல்ல் பனங்கிழங்கு வாங்கி வச்சிருந்தாங்க...காலையிலே ருசியான் நுங்கு சர்பத் வேற அப்பா வாங்கிட்டு கொடுத்தாப்புல்ல....ஸ்ப்ப்ப்பா தின்னவ்வேலி ஜில்லாக்குன்னு சாப்பாட்டுல்ல ஒரு தனி விசேசம் உண்டு அதை அனுபவிச்சி சாப்பிட்டு பாத்தவனுக்கு தான் தெரியும்

அம்மா வைக்கிற  கறி குழம்புக்கு இணை ஏது!!...ஞாயித்துக் கிழமை காலை டிபன் இட்லியும் கறி குழம்பும் தான்...எத்தனை இட்லி சாப்பிட்டேன்னு எனக்கு கணக்கு வைக்கவே முடியல்ல...அம்மா பாட்டுக்கு இட்லியை வச்சு குழம்பை ஊத்திட்டே இருந்தாங்க...வயித்துல்ல இருந்த இடத்தை எல்லாம் நிரப்பி அதுக்கு மேல தொண்டை வரைக்கும் அடைச்சாச்சு... எவ்வளவு நாள் ஆச்சு இப்படி வக்கனையாச் சாப்பிட்டு...வீட்டுச் சாப்பாடு வீட்டுச் சாப்பாடு தாம்...ம்ம்

இதுக்கு பிறகு...சூடாக் கொஞ்சம் போல கருப்பட்டி காபியைத் தம்ளர்ல்ல ஊத்திக்கிட்டு பூரசமரத்துப் பக்கம் வந்து நின்னேன்... பக்கத்துல்ல மல்லிச்செடி தழைச்சு வளந்துருந்துச்சு. ..  கிளையெல்லாம் பூத்துக் குலுங்குச்சு...மல்லிவாசம் அப்படியே ஆளை தூக்கி அசர அடிச்சது...மனசு அப்படியே அந்த வாசத்துல்ல லயிச்சு கிடக்கையிலே செல்போன் சிணுங்குச்சு..டாம் தான் போன்ல்ல பேசுனான்....

கிட்ட இருந்து போன் வந்து சரியா 18 மணி நேரத்துல்ல நான் சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி பார்க்கிங்க்ல்ல நின்னுட்டு இருந்தேன்... அங்கே டாம்...கேஜி...லட்சுமிபதி...நாணா...சுதா எல்லாரும் அங்கேயேத் தான் இருந்தாங்க...எல்லார் முகத்துல்லயும் கவலை ரேகை கோரத் தாண்டவமாடிகிட்டு இருந்துச்சு..

“மூச்சு பேச்சு இல்லடா...கஷ்ட்டம்ன்னு தான் சொல்லுறாங்க...ஐசியுல்ல வச்சிருக்காங்க...”

“ம்”

”ரத்தம் நிறைய போயிருச்சாம்...எதுவும் 48 மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும்ன்னு சொல்லுறாங்கடா”

"ம்”

”லோடுலாரிகாரன்...திருப்பத்துல்ல வச்சு அடிச்சுருக்கான்...ஓவர் ஸ்பீடு...சரக்குப் போட்டிருப்பான் போல...வண்டி எல்லாம் சுத்தமாக் காலி...ஸ்பாட் அவுட்ன்னு முடிவு பண்ணிட்டாங்க...ஒரு ஆட்டோக்காரர் தான் பாத்து தூக்கிட்டு வந்துருக்கார்....”

“ம்”

தொண்டக்குழிக்குள்ளே எதோ ஒரு பந்து உருளுறது மாதிரி இருந்துச்சு...டாம் பேச பேச என்னாலே   "ம்" ங்கற வார்த்தையைத் தவிர வேற எதுவும் வெளியே கொண்டு வர முடியல்ல...நான் அடிப்பட்டி ஆஸ்பத்திரியிலே படுத்தப்போக் கூட பெரிசா தெரியல்ல... உணர்வில்ல...இப்போ என்னவோ போலிருந்துச்சு... உயிர்ங்கறது உடம்புல்ல எங்கே இருக்குன்னு இன்னும் மருத்துவம் கண்டுபிடிக்கல்ல.. உடம்பு வலிக்கு மருத்துவம் பல மருந்து சொல்லிருச்சு...ஆனா உயிர் வலிக்கு என்ன மருந்தோ இன்னும் தெரிஞ்சுக்க முடியல்ல..

டாம் மட்டும் அப்பப்போ உள்ளே போய் விவரத்தை விசாரிச்சுட்டு வந்து சொல்லிகிட்டு இருந்தான்...கொஞ்ச நாளா விட்டிருந்த சிகரெட் பழக்கத்தை அந்த நிமிசம் மறுபடியும் ஆரம்பிக்கச் சொல்லி மனசு பரபரப்பா ஆச்சு...ஆஸ்பத்திரின்னும் பாக்கமா ஒரு ஓரமா போய் ஊதிட்டு வந்து உக்காந்தேன்...

தம்மடிக்கும் போது மனசு நிக்காம தறிகெட்டு ஓடுச்சு....பூரச மரத்தடியிலே வச்சு நடந்த அந்த முத சந்திப்புல்ல தொடங்கி....மல்லி செடியை நட அவப் பாவாடையை இடுப்புல்ல தூக்கி சொருகிட்டு நின்ன அழகான ஒரு மாலை பொழுதுன்னு நீண்டு... அவளுக்கு வைத்தியும் அவத் தங்கச்சி மூக்களகியும் சேந்து சைக்கிள் ஓட்டச் சொல்லிக் கொடுத்தது...அதை ஹகிரவுண்ட் கட்டச் சுவத்துல்ல உக்காந்து நான் ரசிச்சது... அப்புறம் என் முட்டாத் தனத்தாலே அவளை அழ வச்சேனே..அந்த அழுகை..அங்கே வந்து மனசு பெரூமூச்சு விட்டுச்சு...முழுசா எரிஞ்ச சிகரெட் விரலைச் சுட்டுருச்சு...நினைவுக்கு வந்து திரும்பவும் பார்க்கிங் ஏரியா நோக்கி மெதுவா நடக்க ஆரம்பிச்சேன்..

எல்லாத்தையும் உங்க கிட்டச் சொன்ன அவுட்டிங்க் போன அன்னிக்கு கெத்தா மண்ணுல்ல எழுதிட்டு கிளம்பிப் போனக் கதையை மட்டும் தான் சொன்னேன்...அதுக்கு அப்புறமும் அன்னிக்கு ஒரு கதை நடந்துச்சு...சொல்லக் கூடாத ஒரு கதை...ம்ம்ம் மனசுல்ல அந்தக் கதை தான் ஓட ஆரம்பிச்ச்து....நீங்களும் கேளுங்க...

அவுட்டிங்க்ல்ல எல்லா நிகழ்ச்சியும் முடிஞ்சு கூட்டமெல்லாம் சாப்பாட்டுக்கு எதிர்பாத்து உக்காந்து இருந்த நேரத்துல்ல...மேடையிலே எல்லா விளக்கையும் மொத்தமா அணைச்சுட்டாங்க...பவர்கட் போல ஜெனரேட்டர் போட்டு விடுவாங்கன்னு எல்லாரும் உக்காந்து இருந்தோம்....அப்போ

சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் நடிச்சு அப்போதைக்கு ரொம்பவும் பிரபலமான ஹம் தில் தே சுக்கே சனம்(HUM DIL DE CHUKE SANAM) படத்துல்ல ஒரு பாட்டு வரும் பாருங்க.... டோல் பாஜே(DHOL BAAJE)ன்னு...அந்த பாட்டுக்கு ஐஸ் அப்படி ஒரு ஆட்டம் போட்டிருப்பா...சல்மான் சவுண்டே இல்லாம இருப்பான அந்த பாட்டுல்ல... அந்த பாட்டோட மெட்டு மெல்லிய ஒலியா பரவ ஆரம்பிச்சது...அப்படியே பாட்டும் ஆரம்பம் அச்சுது.... பாக்கப் போனா அந்த படம்  நம்ம பாக்யராஜ் எடுத்த அந்த 7 நாட்கள் படத்தைச் சுட்டு எடுத்தது தான்...ஆனா பாட்டு எல்லாம் பட்டாசுங்க..அதுல்லயும் ஐஸ் ஆட்டம் செம மத்தாப்புங்க..


அந்த இசைக்கு ஏத்தாப்புல்ல மேடையிலே ஒவ்வொரு விளக்கா எரிய...வெளிச்சம் பரவ...

ஒய்யாரமா...மஞ்சளும் கருப்பும் கலந்த கலர் காக்ரா சோளியிலே நடந்து வந்தது....ரஞ்சனி...எனக்கு நாக்கு உலந்து மேல் உதட்டுக்கு உள் பக்கமா ஓட்டிகிச்சு..

ஒட்டியாணம் கட்டிய இடுப்பை இசையின் வேகத்துக்கு தகுந்த மாதிரி வெடுக் வெடுக்னு அவ வெட்டி ஆட ஆரம்பிச்சதும்...அவன் அவன் சோத்தை மறந்து விசிலைப் போட்டு மண் தரைன்னும் பாக்கமா உக்காந்து ரசிக்க ஆரம்பிச்சுட்டான்க...

வளைந்து நெளிந்து அவ ஆட ஆட எனக்கு குளிர் ஜூரமே வந்துரும் போலிருந்துச்சு....ப்சங்க எல்லாம் மொத்தமா பிளாட் ஆயிட்டாங்க...அடிச்ச சரக்கோட மப்பு நிறைய பேருக்கு இறங்கிப் போச்சு..பொண்ணுங்களும் உற்சாகமா சவுண்ட் விட்டு அவளை இன்னும் ஏத்தி விட்டாங்க

மேடையிலே ஒரு பிரளயமே நடந்துகிட்டு இருந்துச்சு....ஆட்டம்ன்னா ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம்....சாரி ஐஸ்...போட்டின்னு வந்தா நீ ரஞ்சனிகிட்ட இருந்து ஒரு ஆயிரம் மைல் தளளி நிக்கற்து உனக்கு நல்லது...உன் இமேஜூக்கு நல்லதுன்னு ஐஸ்வர்யா கிட்டப் போய சொல்லமுடியாததால்ல எனக்கு நானே சொல்லிகிட்டேன்...

கையிலே கேமரா இல்ல...பரவாயில்ல கண்ணையே கேமராவா மாத்தி அவளை வளைச்சு வளைச்சு போட்டோவா எடுத்து மைன்ட்ல்லே பிரிண்ட் போட்டு மைண்ட் சுவத்துல்ல மாட்டிவச்சுட்டு  இருந்தேன்...

ஆட்டத்தைப் பாத்தவங்க எல்லாரும் வாயைப்  பிளந்தப் படியே நிக்க ஆட்டம் முடியும் போது மொத்த பேரும் உச்சக் கட்ட பரவச நிலையைத் தாண்டிப் போயிட்டாங்க...மேடைக்கு கீழே அவன் அவன் தனியா ஒரு நாட்டியக் கச்சேரியே நடத்திட்டு இருந்தான்...சுருக்கமா சொல்லணும்ன்னா அவ ஒரு மந்திரக் கயிறு போட்டு மொத்தப் பேரையும் ஆட வச்சுட்டா..

பாட்டு முடியும் போது...மென்மை வன்மைன்னு கலந்து அதுல்ல பெண்மையைக் கொஞ்சம் சேர்த்து...கவிதையாச் சொல்லணும்ன்னு பாத்தேன்...முடியல்ல...எப்படி சொல்லுறது...தமிழ்ல்ல வார்த்தையே பத்தாது அவ அப்போ என்னப் பாத்த பார்வையை வருணிக்க...இளையராஜால்ல ஆரம்பிச்சி ரஹமான் வரைக்கும் எல்லாரும் என் பக்கமா வந்து அந்த நிமிசத்தைக் கொண்டாட என்னமோ எல்லாம் வாசிச்சாங்க தெரியுமா...நம்புங்க நான் செத்துட்டேன்...அவ இன்னொரு முறை பாக்க மாட்டாளான்னு தவிச்சுட்டேன்...ஓவருன்னு நீங்க நினைச்சா..கம்மின்னு நான் சண்டைப் போடுவேன்...அவ ஒரு தேவதை...சோ லவ்லி தேவதை...


தேன்ல்ல தலை குப்புற விழுந்த வண்டு மாதிரி அவ அழகுல்லயும் அபிநயத்திலும் மொத்தமா கவுந்த நான் அவளைத் தேடி மேடைக்குப் பின்னாடி போனேன்..


அவளைப் பாத்த நேரத்துல்ல வார்த்தை எல்லாம் விசா வாங்கிட்டு கிளம்பி போயிருச்சு...கெத்து எல்லாம் செத்து வெத்தா உடம்பு மட்டும் நிக்குது....அவ முகத்துல்ல இருந்து உதறி விட்ட வேர்வைத் துளி என் முகத்துல்ல பட்டு சிதற்...அதுக்கும் மேலயும் என்னால முடியல்ல..


வார்த்தைங்க தோத்து போற இடத்துல்ல செயல்கள் சட்டுன்னு ஜெயிக்குமாம்...அவத் தோளைத் தொட்டு என் பக்கம் திருப்புனேன்...அவக் கண்களை அவ்வளவு பக்கத்துல்ல அதுக்கு முன்னாடி நான் பாத்தது இல்ல...கடைசியா..எதோ ஒரு படத்துல்ல மீனாவோட கண் க்ளோஸ் அப்பை தான் அவ்வளவு பக்கத்துல்ல பேரின்ப விலாஸ் தியேட்டர்ல்ல முத வரிசையிலே உக்காந்து பாத்ததா ஞாபகம்...இவக் கண்ணைப் பாத்து திணறி போயிட்டேன்...

அவ அசையாம நின்னா...சின்ன சத்தமோ சலனமோ இல்ல அவகிட்ட....இன்னும் கொஞ்சம் துணிஞ்சு என் உதட்டை அவ உதட்டுக்கு ரொம்ப பக்கமா கொண்டு போயிட்டேன்....அவளோட வாசம் வச்சு அவ என்ன ப்ர்ப்யூம் யூஸ் பண்ணுறான்னு என்னாலே யூகிக்க முடியல்ல...அதுவா முக்கியம்...அவ கண்ணை மூடவே இல்லை...என்னை இன்னும் ஆழமாப் பாத்துட்டு இருந்தா...

மழையிலே நனைஞ்சு ஈரமா இருக்க செர்ரீ பழம் மாதிரி அவ உதடு இரண்டும் எனக்கு ரொம்பவே பக்கத்துல்ல இருந்துச்சு....என் கை இரண்டும் அவ தோளை அழுத்திப் பிடிச்சி இருந்துச்சு...கட்டிப்பிடிச்சும் பிடிக்காமலும் இருந்தா எப்படி இருக்குமோ அந்த ஒரு மாதிரி நிலையிலே இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தோம்...அவ மூச்சு காத்து என் முகத்துல்ல பட்டுட்டு இருந்துச்சு...அது கொஞ்சம் சூடா இருந்துச்சு....அவ விலகவும் இல்ல...என்ன எதிர்க்கவும் இல்ல

அவ உதட்டை என் உதட்ட்டோடச் சேத்து பூட்ட்ப் வினாடிக்கும் நேரம் கம்மியா தான் இருந்துச்சு...அந்த நேரம் எனக்குள்ளே என்னமோ முழிச்சுகிச்சு....சட்டுன்னு அவக் கிட்ட இருந்து விலகிட்டேன்...அவளை ஒரு முறை பாத்தேன்...அவ கண்ணுல்ல சின்னச் சலனமோ கலவரமோ எதுவும் இல்ல...ரொம்ப ஆழமான அமைதி மட்டுமே என்னால பாக்க முடிஞ்சது...நான் அதுக்கு மேல அங்கே நிக்காம திரும்பி இருட்டுல்ல இறங்கை நடக்க ஆரம்பிச்சேன்... திரும்பி பாக்காமல் தான் நடந்தேன்...ஆனாலும் அவப் பார்வை என் முதுகை துளைச்சு முன்னாடி வர்ர மாதிரியே இருந்துச்சு எனக்கு...

நான் செஞ்ச வரைக்கும் ரைட்டா?? செய்யாம விட்டது தப்பா??ன்னு எனக்கு தெரியல்ல...ஒண்ணு மட்டும் புரிஞ்சது....I WAS TRULY MADLY DEEPLY AND VERY BADLY IN LOVE WITH HER...i WOULD DIE FOR HER....

மூணாவது நாள்...

அவளை அப்பவே பாக்கணும் போல இருந்துச்சு... ஒரு பூங்கொத்தை வாங்கிட்டு அவ ரூமுக்குத் போனேன்...மல்லிகைப் பூங்கொத்து...

நான் போன நேரம் அங்கே யாரும் இல்ல..ரூம் கதவு சாத்தியிருந்துச்சு.. கதவை மெல்லத் தட்டிட்டு...உள்ளே போனேன்....ஆஸ்பத்திரி பச்சை கலர் ட்ரெஸ்ல்ல அவளைப் பாக்க என்னவோ போலிருந்துச்சு... குழந்தை மாதிரி குவிஞ்சு படுத்து நல்லாத் தூங்கிட்டு இருந்தா...அப்படியே நின்னு அவ முகத்தைப் பாத்துட்டே இருக்கணும்ன்னு தோணுச்சு..பாத்துட்டே நின்னேன்....

தேவதை தூங்குறா....என்னையுமறியமா குனிஞ்சு அவ நெத்தியிலே முத்தம் வைக்க போனேன்..அப்புறம் அந்த முத்தத்தையும் என் உதட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைச்சுட்டு நிமிந்தேன்......

தலையிலே எதோ சர்ஜரி பண்ணியிருப்பாங்க போல...கட்டுப் போட்டிருந்தாங்க... முடி எல்லாம் எடுத்துருந்துச்சு...கழுத்து பக்கம் நீளமான காயம்... உதடு கன்னங்களில் வெட்டு காயம்...அவத் தூக்கத்தை கலைக்க விருப்பமில்லாம அப்படியே கிளம்பி வந்துட்டேன்... பூங்கொத்துல்ல பேர் எழுதாம மேசையில்ல வச்சுட்டு வந்தேன்.....

கால் போனப் போக்குல்ல நடந்து சுத்திட்டு ராத்திரி ரொம்ப லேட்டாத் தான் ரூமுக்கு வந்தேன்...டாம் அவங்க மாமா வீட்டுக்குப் போயிட்டான்... அவளோட முகம் மறுபடியும் மறுபடியும் மனசுக்குள்ளே வந்து வந்து போயிட்டு இருந்துச்சு...

மொட்டை மாடியிலே வெட்ட வெளியிலே வந்து நின்னேன்.....ரொம்ப் ரொம்ப வருசத்துக்கு அப்புறம் வானத்தைப் பாத்து கையெடுத்து கும்பிட்டு கத்துனேன்....

"கடவுளே அவளை இங்கேயே என் கூட இருக்க விடு....உன் ராஜ்ஜியத்துல்ல  பல்லாயிரக் கோடிக்கணக்கான தேவதைகள் இருக்காங்க...எனக்கு என் வாழ்க்கையிலே இவ மட்டும் தான் சாமி தேவதை....ப்ளிஸ் அவளை என் கிட்ட கொடுத்துரு....."

“பொழச்சுக்குவா அவளுக்கும் ஒண்ணும் ஆகாது...ஒண்ணும் ஆகாது... எனக்கு நானே திருப்பித் திருப்பிச் சொல்லிகிட்டேன்..."

அடுத்த பகுதியில் வாசம் நிறையும்....

4 comments:

கோபிநாத் said...

ம்ம்...முடிச்சிடுங்க ;-))

மணி said...

ennaachu boss..

Unknown said...

கோபி முடிச்சுடுங்கன்னு போட்டு ஸ்மைலி வேறவா இதுல்ல எதுனாச்சும் உள்குத்து இருக்கா:)))

Unknown said...

மணி கடைசி பகுதி ஒரிரு நாள்ல்ல வந்துரும் நீங்களே என்னாச்சுன்னு தெரிஞ்சுக்குவீங்க!