Saturday, July 28, 2007

சின்னக்குளம் - தம்பி கதிரின் மடல்

சமீபத்தில் பக்கம் 78ல் பதிந்த தொடர் பற்றி நிறைய சந்தோஷம் தரும் கருத்துக்கள் வந்தன. அதில் கொஞ்சம் கூடுதல் சந்தோஷம் தரும் விதத்தில் நம்ம தம்பி கதிர் எழுதிய மின்மடல் அமைந்தது. அந்த சந்தோசத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் தம்பியின் அனுமதியோடு

அண்ணன் தேவ்,

தமிழ்மணத்துல தொடர் எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. எத்தனை பேர் இருந்தாலும் நேர்த்தியா சொன்னவங்கன்னு
பார்த்தால் அதிகம் தேறாது. ஒவ்வொரு பாகமா படிக்கறதுல விருப்பமே இல்லை எனக்கு அதனால்தான் தொடரே
படிப்பதில்லை. முதல் இரண்டு பகுதியை வெளியிடும்போதே படித்திருந்தாலும் அதற்கடுத்த வந்ததை படிக்காமல் விட்டு விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்பு மொத்தமாக ஏழு பாகங்களையும் ப்ரிண்ட் எடுத்து அறைக்கு கொண்டு போய்
படித்தேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அனுபவமா இருந்தது.

self narration மட்டும்தான் ஒரு படைப்பை அல்லது பழைய நினைவை முழுமையாக சொல்ல முடியும், வெறும் உரையாடல்கள் கொண்ட கதைகள் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. சின்னக்குளத்தில் நிறைய உரையாடல் இருந்தாலும் எதுவுமே சலிப்பை ஏற்படுத்தல. அங்கங்கே உங்களோட நகைச்சுவை உணர்வு பார்த்து ஆச்சரியப்பட்டேன். :)

வேலை முடிஞ்சு போய் டய்ர்டா பெட்ல உக்காந்து இந்த கதைய படிச்சிட்டு நிமிர்ந்து பார்த்தா முகத்துல ஒரு புத்துணர்ச்சி.
இதுதான் படைப்பாளியோட வெற்றி.

நாம் நிறைய கதைகள் படித்திருக்கலாம் ஆனால் படித்தவற்றில் பாதித்த ஏதோ ஒரு சிறுகதைதான் ஞாபகத்துக்கு வரும்.

ஒரு கதைய படித்து முடித்தபின் ஒரு சலனமோ, ஒரு தாக்கத்தயோ, ஒரு புன்னகையையோ விட்டு செல்ல வேணும்.

பதின்ம வயதில் எல்லாருக்கும் ஒரு நிறைவேறாத காதல் இருக்கும் அந்த காதல்தான் நம் வாழ்க்கையையே தீர்மானிக்கிற சக்தியாக கூட மாற வாய்ப்பிருக்கு. ஆனா அந்த காதலை யாருமே நகைச்சுவையா சொல்ல மாட்டாங்க, அதையும் இயல்பா
எடுத்து சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

நிறைய எழுதுங்க. நிறைவாக எழுதுங்க

அன்புடன்
தம்பி

6 comments:

Unknown said...

நன்றி தம்பி

Anonymous said...

//ஒரு கதைய படித்து முடித்தபின் ஒரு சலனமோ, ஒரு தாக்கத்தயோ, ஒரு புன்னகையையோ விட்டு செல்ல வேணும்.//

நானும் உங்க எழுத்தை பாரட்டி எழுதணும்ன்னு நினைச்சிருந்தேன். சோம்பேறித்தனத்தினால எழுதல. நல்லா எழுதறீங்க.
மேலே சொன்ன தம்பியின் வார்த்தைகள், என்னுடைய எண்ணங்கள அப்படியே பிரதிபலிக்குது. வாழ்த்துக்கள். நிறைய
எழுதுங்க.

G.Ragavan said...

ரொம்பச் சரியாச் சொல்லீருகாரு தம்பி. சரிதான்.

Unknown said...

//நானும் உங்க எழுத்தை பாரட்டி எழுதணும்ன்னு நினைச்சிருந்தேன். சோம்பேறித்தனத்தினால எழுதல. நல்லா எழுதறீங்க.
மேலே சொன்ன தம்பியின் வார்த்தைகள், என்னுடைய எண்ணங்கள அப்படியே பிரதிபலிக்குது. வாழ்த்துக்கள். நிறைய
எழுதுங்க. //

நன்றிங்க, அனானியா வந்துச் சொன்னக் கருத்தைப் பெயர் போட்டுச் சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் சந்தோசமா இருந்து இருக்கும்

Unknown said...

//ரொம்பச் சரியாச் சொல்லீருகாரு தம்பி. சரிதான். //

தமிழ்மணத்தில் தொடர்களின் பிதாமகனாய் நான் நினைக்கும் ஜி.ராவின் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

(ஜிராவை தொடர்களின் பிதாமகன் அப்படின்னு சொன்னா டிபிஆர் சார் ரசிகர்கள் கோவிக்கக் கூடாது டி.பி.ஆர் சார் மெகா தொடர்களின் பிதாமகன்)

Anonymous said...

Dev,
anony - sam. Best wishes