Friday, February 17, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 6

இது வரை...

கண் முழிச்சு கட்டில் ஓரமா இருந்த வாட்ச்ல்ல  டைம் பாத்தேன்...மணி 12 ஆகி இருந்துச்சு...தலை வலி தாங்க முடியல்ல...உடம்புல்ல யாரோ தீ வச்ச மாதிரி கொதிச்சுது...உள்ளுக்குள்ளே மொத்தமும் நடுங்குச்சு....மெதுவா எழும்பி தடுமாறி கிச்சன் பக்கம் போனேன்...சூடா ஒரு காப்பி குடிக்கணும் போல இருந்துச்சு...

காப்பியைப் போட்டு எடுத்துட்டு சோபாவில்ல வந்து சாய்ஞ்சேன்...மொபைல்ல 12 மிஸ்ட் கால்...டாம்...லட்சுமிபதி...ஆபிஸ் நம்பர்...அம்மா...ம்ம்ம் இன்னும் சில தெரியாத நம்பர்கள் ஊர்ல்ல இருந்து வைத்தி நம்பர்...அப்புறம்...அவ நம்பர்...அதுல்ல இருந்து எந்த மிஸ்ட் காலும் இல்ல...எஸ் எம் எஸ்கள் வேற வந்து குவிஞ்சுருந்துச்சு...

மெசெஜ் பாக்ஸை திறக்கவும் இல்லை...யாருக்கும் திருப்பி கூப்பிடவும் நம்பரை எல்லாம் பாத்து முடிக்கும் போது தலை எல்லாம் சுத்திச்சு...காலுக்கு கீழே தரை இருக்கான்னு பாத்துகிட்டேன்...
அவசரத்துக்கு இருந்த ஒரு பெரஸ்ட்டமால் எடுத்து விழுங்குறது எதாவது சாப்பிடணுமே...அம்மாவின் அவசர மிளகு ரச ரெசிப் ஞாபகம் வந்துச்சு...அம்மா அளவுக்கு காட்டமான இதம் பதம் இல்லைன்னாலும் ஒரள்வு சுமாரா வந்துருச்சு ரசம்...கொஞ்சம் தெம்பு திரும்புச்சு...சாப்பிட்டுட்டு மாத்திரையும் போட்டுட்டு மூணு மணி வாக்குல்ல ஆபிஸ்க்கு கிளம்பி போனேன்...

இதுக்குள்ளே ஆபிஸ்ல்ல இருந்து இன்னும் 12 மிஸ்ட் கால் வந்துருந்துச்சு...எதையும் நான் எடுக்கல்ல...மொத்தம் ஆபிஸ் மிஸ்ட் கால் 22...

“உர்ரெ டயர்டா உன்னரா...ஓகேவா பாபு”

“சுதா நைட் பல்ப் கொடுத்துட்டு கேஜி கூட போயிட்டாளா...காலையிலே கரெக்ட் பண்ணியா..”

“பாபு நுக்கு அல்லாம் ஜோக்குரா....போரா”

“டேய்...நீ பேசுற பாதி எனக்கு புரியல்ல...ஆனா பாசத்துல்ல எதோ விசாரிக்குறன்னு தெரியுது...நீ நல்லவன் டா...இரு வேலையை முடிச்சுட்டு பேசுவோம்...”

அஞ்சு மணி பக்கம் ரிப்போர்ட் எல்லாம் முடிச்சி...ஒரு வழியா வீட்டுக்கு கிளம்ப சீட்ல்ல இருந்து எழும்புனேன்..

”ரிவியூ முடிச்சுட்டு  கொஞ்சம் கமெண்ட்ஸ் இருக்கு பிக்ஸ் பண்ணிட்டு போயிடமுடியுமான்னு ஆர்பி கேட்டாங்க” நாணா தயக்கத்தோடு கேட்டான்..

கண் எல்லாம் லேசா இருட்டிகிட்டு வந்துச்சு...உடம்புல்ல இருந்த மொத்த தெம்பையும் இழுத்து வச்சு தலையை சரின்னு ஆட்டுனேன்...

ஆறு மணி ஆச்சு....சட்டுன்னு கரண்ட் கட் ஆகிருச்சு...கம்ப்யூட்டர் மட்டும் பேக் அப்ல்ல ஓடிட்டு இருந்துச்சு...இரண்டு நிமிசம் கழிச்சு கரண்ட் வந்தப்போ...

கோரசா எல்லாரும் சேர்ந்து ஹேப்பி பர்த் டே டூ யுன்னு சத்தமா சொல்லிகிட்டே என் க்யுபிக்கல் பக்கம் கையிலே பலூனோட வந்து நின்னாங்க...எல்லாரும்ன்னா எல்லாரும் தான்...அவளும் தான்...

சட்டுன்னு ஜூரம் விட்டுப் போனாப்புல்ல இருந்துச்சு....காலையிலே இருந்து மொபைல்ல அவ்வளவு மிஸ்ட் கால் இருந்ததுக்கான அர்த்தம் அப்போத் தான் விளங்குச்சு...27வது பொறந்த நாள்....மார்ச் 31....அம்மா அது தான் காலையிலே கால் பண்ணியிருக்கணும்...சட்டுன்னு ஞாபகம் வந்துச்சு....டாம்....வைத்தி கூட அதான் கூப்பிட்டுருக்கான்...

எல்லாரும் கையெழுத்து போட்ட கார்ட் ஒண்ணு கொடுத்தாங்க...அதுல்ல அவக் கையெழுத்தும் இருந்துச்சு....HAPPY BIRTHDAY - RANJANI PRIYADARSHINI..
ஏழு வருசத்துக்கு முன்னாடி பாத்த அதே கையெழுத்து...அப்போ ஹேப்பி பர்த் டேக்கும் அவ பேருக்கும் நடுவுல்ல LOVEங்கற வார்த்தை இருந்துச்சு...இப்போ அது இல்ல...எனக்கு மெதுவா சிரிப்பு வந்துச்சு...

எனக்கு பிடிச்ச பிளாக் பாராஸ்ட் கேக் வாங்கி வச்சிருந்தாங்க...ஆளுக்கு ஆள் ஊட்டி விட்டாங்க...ஒரே அமர்களம் பண்ணாங்க....ஒரு பெரிய வைன் கிளாஸும்  நோ ஸ்மோக்கிங்ன்னு ஒரு பெரிய சைஸ் வால் ஹேங்கிங்கும் தந்தாங்க....கலாட்டாப்  போச்சு...

அவ கூட்டத்தோட வந்து நின்னாளே ஒழிய என்கிட்ட எதுவும் பேசல்ல...ஒரு சின்ன புன்னகையைத் தவழ விட்ட படி அவளும் கொண்டாட்டத்துல்ல கலந்துகிட்ட மாதிரி காட்டிகிட்டா..

காலையில் வீட்டுக்கு வந்தது ஞாபகம் இருந்துச்சு....அப்புறம் என்ன ஆச்சி...எப்போத் தூங்குனேன் எப்படி தூங்குனேன் எதுவும் ஞாபகம் இல்ல...

பைக்ல்ல அவ முன்னாடி நான் பைக்ல்ல உறுமிட்டு நின்னேன்....பின்னாடி ஒரு கால் டாக்சி வந்து நின்னுச்சு...என்னைத் திரும்பி பாக்கம அவ அதுல்ல ஏறவும் டாக்சி வேகமாப் புறப்பட்டு போச்சு..சரியா அந்த நேரம் பொத்துகிட்டு ஊத்துச்சு பாக்கணும் வானம்...மழைன்னா அப்படி ஒரு மழை...ஒதுங்கி நிக்கத் தான் வண்டி விட்டு இறங்குனேன்...

திடீருன்னு ஒரு எண்ணம்...பைக் எடுத்துட்டு அந்த டாக்சி போன திசையிலே நானும் போனேன்...ஒரு நூறு அடியிலே அந்த டாக்சியைப் புடிச்சுட்டேன்...கொஞ்சம் இடைவெளி விட்டு டாக்சி பின்னாட் கொட்டுற மழையிலே நனைஞ்சிட்டே போனேன்...வண்டி வேளச்சேரி ரோட்டுக்கு திரும்பும் போது நின்னுச்சு...நின்ன வண்டி நின்னுட்டே இருந்துச்சு....

எதோ பிரச்சனைன்னு தெரிஞ்சுது....அடுத்த அரை மணி நேரம் அந்த டாக்சி டிரைவரும் நானும் சேர்ந்து ஒரு வழியா வண்டியை ஓடுற அளவுக்கு ரெடி பண்ணிட்டோம்...விடாம பெஞ்சுது மழை...மொத்தமா நனைஞ்சு போயிட்டேன்..லேசா குளிர் வேற வெட வெடன்னு உடம்பை ஆட்ட ஆரம்பிச்சது...அவ வண்டிக்குள்ளேயே உக்காந்து இருந்தா...

ஒரு கணத்துல்ல வானத்துல்ல இருந்து ஒரு வெளிச்சம் விழுந்துச்சு பாக்கணுமே...மின்னல்...அந்த மின்னலடிச்ச வினாடியிலே அவ முகத்தை நான் எதேச்சையாப் பாத்தேன்...கடவுள் தன்னை பெண் அம்சமா படைச்சிருந்தா அது அவளைப் போல தான் இருந்து இருக்கும்...உலகின் ஆண்டவன் படைச்ச அழகுக்கு எல்லாம் சேத்து ஒரு கோயில் கட்டுனா...அதுல்ல மூல பிரகாரத்துல்ல இருக்க வேண்டிய பெண் கடவுள் அவளாத் தான் இருக்க முடியும்ன்னு தோணுச்சு....ரஞ்சனி மின்னலும் மழையுமா என் வாழ்க்கையில் வந்தவள்...

டாக்சி வீடு வரைக்கும் போக நான் தெருமுனையில்ல நின்னு அவ இறங்கி வீட்டுக்குள்ளே போறதைப் பாத்துட்டு கிளம்புனேன்..பாதி வழி வரும் போதே என் உடம்புல்ல குளிர் நடுக்கம் அதிகமாகியிருச்சு

எது எப்படியோ என் 28வது பிறந்த நாள் அதிகாலையில்ல மின்னல் மழைக்கு நடுவே அந்த ஒரு வினாடி நான் பாத்த அவ முகம் என் வாழ் நாள்ல்ல எனக்கு கிடைச்ச ரொம்ப பெரிய பிறந்த நாள் பரிசு...

முதல் நாள் ராத்திரி நடந்த விசயத்தை எல்லாம் அப்படியே மனசுல்ல ஓட்டி முடிச்சேன்...

“ஹேப்பி பர்த் டே பாஸ்” புதுசா ஒரு குரல் கேட்டு நிமிந்தேன்...

“ஹாய் இது அஸ்வின்....என் ஃபியான்சி....” அவ தான் சிரிச்சுட்டே அறிமுகம் செஞ்சு வச்சா..

சாதரணமா சினிமாவுல்ல வர்ற அமெரிக்கா மாப்பிள்ளை எல்லாம் செக்கசெவன மீசை எல்லாம் மழிச்சுட்டு நுனி நாக்குல்ல தமிழை கொலை பண்ணுற கேரக்ட்டரா பாத்து பழக்கப்பட்ட எனக்கு அஸ்வின் ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சார்...

ஆறடிக்கு கொஞ்சம் அதிகமா உயரம்..நல்ல ஜிம் பாடி....நம்ம கலர்...கருப்பு...அடர்த்தியான முடி...அளவான மீசை....பால் சிரிப்பு....

“ஹலோ...பாஸ்...என்ன பர்த் டே அதுவுமா ட்ரீட் எல்லாம் இல்லையா?”
ரொம்ப யதார்த்தமா கலகலன்னு கேட்டார் அஸ்வின்...

எனக்கு அவரை முதல் சந்திப்பிலேயே பிடிச்சிப் போச்சு...ரொம்ப பிடிச்சிப் போச்சு...

“கண்டிப்பா பாஸ் போகலாம்....சரக்கோட....கொண்டாடிடுருவோம்...”
நானும் சிரிச்சிகிட்டே பதில் சொன்னேன்...ஓரக்கண்ணால் அவளைப் பாத்தேன்...அவப் பார்வையிலே இப்போ நெருப்பும் இல்ல வெறுப்பும் இல்ல...

”ஹேப்பி பர்த் டே.......” இப்போ அவ குரலில் தேன் தெறிச்சது....

“தேங்க்யூ....” என் மனசு சந்தோசத்துல்ல ரெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சது..

தொடரும்

3 comments:

கோபிநாத் said...

ரைட்டு...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;-))

Anonymous said...

waited what will happened after drooom but releasin it later with the b'day suprise was extraordinary.great 4 bringin characters real,beyond cine touch.great work.expectin next release

மணி said...

என்ன பாஸ் கொஞ்சம் த்ரில்லா தான் இருக்கு இந்த காதல்...
நடக்கட்டும்....