Thursday, May 25, 2006

கவி 17: பழையக் கிறுக்கல்கள்



என் மனசு
வெள்ளையாய் தான் இருந்தது..
நீ...உன் பார்வைகளால்
அதில் ரங்கோலிபோடும் வரை....

------------------------------------------------

உன் கண்ணில்
தூசு விழுந்தாலும்
கலங்கிப் போவதென்னவோ
நான் தான்..
உன் கருவிழி குளத்திற்குள்
கலங்கலாய் என் உருவம்..

-------------------------------------

சொல்லித் தெரிவதில்லை
காதல்...
நீ சொன்னது...
கடற்கரையோரம்...
திரும்பி பார்த்தேன்...
என் பாதச் சுவடுகள் மீது
உன் சின்னக் காலடி தடங்கள்..

---------------------------------------------

உனக்கு வெட்கப் படத் தெரியுமா?
ச்சீ போடா...என்றாய்
உன் கன்னம் சிவந்தது
அந்த கன்னச் சிவப்பில்
நான் படித்து ரசித்த
மூன்றெழுத்து கவிதை
கா...த...ல்......

18 comments:

நன்மனம் said...

தேவ், நல்லா இருக்கு.

உங்கள் நண்பன்(சரா) said...

நல்ல கவிதை..
வாழ்த்துக்கள்


அன்புடன்...
சரவணன்.

நாமக்கல் சிபி said...

சூப்பர் தேவ்!

ப்ரியன் said...

/*உனக்கு வெட்கப் படத் தெரியுமா?
ச்சீ போடா...என்றாய்
உன் கன்னம் சிவந்தது
அந்த கன்னச் சிவப்பில்
நான் படித்து ரசித்த
மூன்றெழுத்து கவிதை
கா...த...ல்......*/

அழகு கவிதை தேவ் :)

ப்ரியன் said...

/*சொல்லித் தெரிவதில்லை
காதல்...
நீ சொன்னது...
கடற்கரையோரம்...
திரும்பி பார்த்தேன்...
என் பாதச் சுவடுகள் மீது
உன் சின்னக் காலடி தடங்கள்..*/

இதுவும் அழகு

நவீன் ப்ரகாஷ் said...

//நீ...உன் பார்வைகளால்
அதில் ரங்கோலிபோடும் வரை....//


//அந்த கன்னச் சிவப்பில்
நான் படித்து ரசித்த
மூன்றெழுத்து கவிதை//

அழகு தேவ் !! மேலும் கவியுங்கள் ! :)

கைப்புள்ள said...

ரேஸ்கல்! நீ கெட்டது போதாதுன்னு சின்னப் பில்லங்களை வேற கெடுக்குறே? படிக்கிற பில்லங்களைத் தூண்டி விடுறே?

ஆனாலும் நல்லாத் தான்யா இருக்கு.

நாமக்கல் சிபி said...

//ரேஸ்கல்! நீ கெட்டது போதாதுன்னு சின்னப் பில்லங்களை வேற கெடுக்குறே? படிக்கிற பில்லங்களைத் தூண்டி விடுறே?
//

கவிதை இரசிக்கும்படியா இருந்தது!
கைப்புள்ளயின் பின்னூட்டம் ரசிக்கும்படியா இருக்குது!

Unknown said...

வாங்க நன்மனம்,

நன்றி.. அப்படியே நேரம் கிடைக்கும் போது பக்கம் 78ஐ சுத்திப் பாத்து உங்கக் கருத்தைச் சொல்லுங்க.:-)

Unknown said...

வாங்க சரவணன்,

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நீங்க இந்தப் பக்கம் வந்ததில் உங்க கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான்ப் பதிவுகள். தொடருங்கள் நண்பரே.

Unknown said...

சிபி,

ஒத்தச் சொல் சொன்னாலும் உச்சி மொத்தமும் குளிரும் சொல்லைச் சொல்லிப்புட்டீங்க:-)

Unknown said...

//அழகு கவிதை தேவ் :) //

//இதுவும் அழகு //

நன்றி ப்ரியன்

Unknown said...

Hi Maanavan,

Hope u got my message. Welcome to blog world.

Unknown said...

//அழகு தேவ் !! மேலும் கவியுங்கள் ! :)//

நான் உங்கள் ரசிகன் தலைவா!!!!

Unknown said...

//ரேஸ்கல்! நீ கெட்டது போதாதுன்னு சின்னப் பில்லங்களை வேற கெடுக்குறே? படிக்கிற பில்லங்களைத் தூண்டி விடுறே//

அய்யா கைப்புள்ள... நம்ம கவிதைக்குக் கருத்துச் சொல்லிட்டீங்க..நீங்க அர்த்த ராத்திரியிலே மால்கேட் மொட்டை மாடியில் ரகசியமா எழுதியக் கவிதைகளைப் பதிவுலகம் படித்து ரசிக்க சீக்கிரம் வெளியிடுமாறு இந்த நண்பன் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.. செய்வீங்களா?

//ஆனாலும் நல்லாத் தான்யா இருக்கு. //

தாங்க்ஸ்டா மோகன்.

ILA (a) இளா said...

உனக்குள்ள ஒரு தபூ. சங்கர பார்க்குறேன் தேவு.
Link: http://binarywaves.blogspot.com/2004_11_01_binarywaves_archive.html

//ரேஸ்கல்! நீ கெட்டது போதாதுன்னு//


கெட்டு போக கைப்பு ரெடியா?

ILA (a) இளா said...

உனக்குள்ள ஒரு தபூ. சங்கர பார்க்குறேன் தேவு.
Link: http://binarywaves.blogspot.com/2004_11_01_binarywaves_archive.html

//ரேஸ்கல்! நீ கெட்டது போதாதுன்னு//


கெட்டு போக கைப்பு ரெடியா?
தபூ சங்கரதான் பார்க்கிறேன், தப்பா பார்க்கிறது யாரு?

Unknown said...

//உனக்குள்ள ஒரு தபூ. சங்கர பார்க்குறேன் தேவு.//

வேளாண் தமிழா உன் அன்புக்கு ஒரு அளவே இல்லையா? நானும் ஒரு தபூ சங்கர் ரசிகன் அவ்வளவே!!!