Tuesday, December 06, 2005

கதை1: மௌனம் பேசிய பொழுது...

ஒரு மாலை இளவெயில் நேரம்... ராகா.காம் இல் பாட்டு ஓடிக்கிட்டு இருந்துச்சு...
ஆபிஸ் லஞ்ச் டைம். லஞ்ச்க்கு பெருசா ஒண்ணும் இல்லை. வழக்கமான் கார குழம்பு சோறும் ரெண்டு பொரிச்ச அப்பளமும் சாப்பிட்டுட்டு காலர நடந்து என் சீட்டுக்கு வந்து உட்கார்ந்தேன். நோக்கியா 6600 மொபைலைத் திருப்பித் திருப்பி பார்க்குறேன். அதுல்ல நானும் என் மனைவியும் சேர்ந்து இருக்குர் போட்டோ. கொஞ்சம் ரொமன்டிக் மூட்ல்ல எடுத்த போட்டோ தான். பார்த்து லேசா நமட்டு சிரிப்பு சிரிக்கிறேன். என் செல்லம் அழகு தான்... நானேச் சொல்லிக் கொள்கிறேன்.
அப்போ டக்குனு தேவுடா... தேவுடா... ரிங்டோன் அடிக்குது... பேனல்ல 9840721*** நம்பர் காலிங்னு பிளாஷ் ஆகுது...
யாரா இருக்கும்னு யோசிச்சுகிட்டே.. எடுத்து ஹலோ... ஸ்பீக்கீங்...ஸ்டைலா சொல்லுறேன்.
“ஹாய்.. D..How are you? ...ம்ம்ம் இன்னும் அந்த.....ஸ்பீக்கீங்ன்னு ஜெர்க் கொடுக்கிற ஸ்டைல் மாறல்ல உனக்கு?”
பட படவென அந்தப் பேச்சு...கலகலவென அந்தச் சிரிப்பு..வாய்ஸ்ல்ல பட்டர்பிளை வச்சுருக்காப்பா..அந்த கமெண்ட்...ஒரு 30 செகண்ட் கேப்ல்ல அந்த குரலுக்குச் சொந்தகாரியைப் பத்தி ஒரு 600 பிளாஷ் பேக் நெஞ்சுக்குள்ளே வந்து மோதிச் சிதறுது.. தொண்டைக்குள்ளே திடிரென்னு ஒரு அடைப்பு… விரல் நுனி இருக்கு இல்ல அந்த இடத்திலே மின்சாரம் உரசிப் போன மாதிரி ஒரு ஷாக். அனுபவிக்கறவனுக்குத் தெரியும். ஒரு மாதிரி ஒரு வலி ஆனா கூடவே ஒரு இதமான ஒரு உணர்வு. வினாடி நேரத்துக்குள்ளே காலத்தின் சக்கரத்துக்குள்ளே சுழன்று ஒரு நிலைக்கு வந்தேன்.
"என்னப்பா D... பேச்சையே காணும்..என் வாய்ஸ்யை மட்டும் தெரியல்லன்னு சொன்னே படவா..போன் வயர் வழியா வந்து உன் கழுத்தை கடிச்சு வச்சுடுவேன்...(அரஜகமான ராட்ஸஸி செய்தாலும் செய்ஞ்டுவா)...அச்சோ ...(அய்யோ அதே அச்சோ) சாரி..சாரி.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..உன் கழுத்தை கடிக்க உன் வீட்டுல்ல ஒரு ஆளு இருப்பா...அவங்க கிட்ட சொல்லி கடிக்க சொல்லுறேன்..."
இந்த பக்கம் பேச்சைத் தொலைத்து நான் நின்னுகிட்டு இருக்கேன்.
“என்னப்பா நானேப் பேசிக்கிட்டு இருக்கேன். நீ டோட்டல் சைலண்ட் மொட்ல்ல இருக்க..ஓகே....ஓகே.... நான் சான்ஸ் கொடுத்தா நீ பேசப் போற...இந்தா சான்ஸ் கிராண்ட்டட் பேசுப்பா “
அதே சிரிப்பு.. ஒட்டு மொத்த கல்லூரியையும் கலக்கி கல்லாங்கோல் போட வைத்த சிரிப்பு.
" ரஞ்சு.. எப்படி இருக்கே?" பொறுக்கி எடுத்த வார்த்தைகளைச் சேர்த்து வைத்து ஒப்பித்து முடித்தேன்.
"ம்ம் பரவாயில்லப்பா... சந்தோஷமா இருக்கு... என் நிக் நேம் சொல்லிக் கூப்பிடுறே.. எங்கே ரொம்ப தூரம் விலகிட்டோமோன்னு நெனச்சிட்டேன்."
"ஹேய் என்ன பேச்சு இது"
"தோடா...சரி.. நீ எப்ப்டி இருக்க? கல்யாணம் பண்ணி அங்கிள் ஆயிட்டே...எப்படி போகுது உன் வாழ்க்கை"
"பர்ஸ்ட் கிளாஸ்.."
ஒரு சின்ன பெருமூச்சு..அதுக்கு பின் கேட்டாள்... "அவங்க எப்படி இருக்காங்க...?"
"ம்ம்ம்ம்..ரொம்ப நல்லா இருக்காங்க... திடிரென்னு எப்ப்டி இங்கே?"
"அதுவா.. ஒரு பேமிலி பங்ஷன்..சென்னை வர வேண்டியதாப் போச்சு"
"ம்ம்ம்..சென்னைக்கு வர்றத்துக்கு அவ்வளவு சலிப்பு உனக்கு..எங்களை எல்லாம் டோட்டலா மறந்துப் போயிட்டீங்க"
"ச்சீ..எல்லோர்க் கூடவும் காண்டக்ட் இருக்கு.. சிவாவுக்கு வாரத்துக்கு 5 பெர்சனல் மெயில் அனுப்புறேன்..பழனிக்கு டெய்லி 20 பார்வர்ட்ஸ் அனுப்புறேன்..குமாருக்கு வாரத்துல்லே கண்டிப்பா 50 எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்...பாபுவுக்கு கண்டிப்பா வீக்லி 2 போன் கால்ஸ்... ஜெயா..ரோஜா..பிரியா...திவ்யா..எல்லோர்க்கிட்டயும் ஸ்டாரங்கான காண்ட்க்ட் இருக்குப்பா"
எனக்குள் சொல்லமுடியாத ஒரு வேதனை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பரவியது. கஷ்ட்டப்பட்டுச் சமாளித்துக் கொண்டேன்.
"என்னை மட்டும் தான் ஒதுக்கி வச்சி இருக்கே இல்லையா...?"
"ம்ம்ம் அப்படி எல்லாம் இலலை..உன்னைப் பத்தி இவங்க கிட்டே எல்லாம் கேட்காத நாள் இல்லை தெரியுமா?"
"மத்தவங்க கிட்டக் கேட்கறதை எனக்கு போன் பண்ணி கேட்க கூடாதுன்னு என்ன பிடிவாதம் உனக்கு?..."
"ஹே D... ரிலாக்ஸ் ப்பா...உன் கூட பேசி மூணு வருஷம் ஆச்சு...எனக்கு இப்போ உன் கூட சண்டை போட தெம்பு இல்லை...ப்ளீஸ் என்னை அழ வைக்காதே..."
அவள் குரல் கம்மியது.
ஹலோ...ஹலோன்னு எறக் குறைய அலறிகிட்டு இருந்தேன்.ஆபீஸ்ல்லே இருக்கேன்ங்கற உணர்வு சுத்தமாத் தொலைஞ்சுப் போயிடுச்சு. எல்லாரும் என்னையேப் பார்ததாங்க. முக்கியமா என்னோட பாஸ் கேபின்ல்ல இருந்து தலையை வெளியே நீட்டி பார்த்தான்.
" ஐ திங்க் பாஸ் வில் பேன் த யுஸேஜ் ஆப் செல்போன்ஸ் இன் த ஓர்க் ஏரியா ( I think Boss will ban the usage of cellphones from the work area) ன்னு நமட்டுச் சிரிப்போடு பக்கத்து சீட்டு பெங்காலி சவுமித்ரோ சொன்னான். எதையுமே கண்டுக்கற மனநிலையில் நான் இல்லை. மறுபடியும் செல்லை எடுத்து அவள் பேசிய எண்ணுக்குச் சுழற்றினேன்.
த் சப்ஸ்கிரைபர் கனாட் பி ரிச்ட் அட் த மொமண்ட்...( The subscriber cannot be reached at the moment)கிளிப்பிள்ளைக் கணக்காய் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தது அவளுடைய செல்போன்.
ராகா.காம் இல் சுட்டும் சுடர்விழியே ...ஓடிக்கொண்டிருந்தது...எனக்கு தான் வேலை ஓடவிலலை..செல் போனை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தேன். தலை வலிக்க ஆரம்பித்தது. எதுக்காக மூணு வருஷம் கழிச்சு எனக்கு கால் பண்ணணும்... என்னை வெறுப்பு எத்துற மாதிரி பேசணும்....பிறகு என்னை.. என் மனசை உடைக்கிற மாதிரி ஒரு அழுகை வேற... சே.. யாருக்க்கு வேணும் இந்த அவஸ்தை...
செல்போனில் மறுபடியும் தேவுடா...தேவுடா... ரிங்டோன் அடித்தது.. பேனலில் அவள் நம்பர் பளிச்சிட்டது.. அந்த கணநேரக் கோபம் காணாமல் போனது. செல்லை அவசரமாய் எடுத்து காதில் வச்சுக்கிட்டேன்.
"சாரி D... மனசு தாங்கல்லைப்பா... இதுக்கு தான் உனக்கு போனேப் பண்ண வேண்டாம்ன்னு நெனச்சேன்"
எனக்கு எதுவும் பேசவே தோன்றவிலலை.
"ஹே D இன்னும் கோவமாப்பா"
"உன் மேல நான் எப்படி கோபப்பட முடியும்..."
அடுத்த அஞ்சு நிமிஷத்துக்கு என்னவெல்லாமோக் கேட்டாள். நானும் பதில் சொன்னேன். எனக்கு அவளிடம் எதாவது கேட்கவேண்டும் போல இருந்துச்சு.. யோசிச்சுப் பார்த்துட்டுக் கேட்டேன்.
"சரி உனக்கு எப்போ க்ல்யாண்ம்.." அவ கலகல்ன்னு சிரிச்சிட்டே இருந்தா. அந்த சிரிப்புலே ஒரு விரக்தி இருந்த மாதிரி தோணுச்சு எனக்கு,கரெக்ட்டோ தப்போ என் அனுமான்ம் அது ..புரியல்லே..ஆனா அவளோட் அந்தச் சிரிப்பு என் மனசுக்குக் கஷ்ட்டமா இருந்துச்சு...
"எதுக்கு.. இப்போ இப்படி சிரிக்கிறே?"
"ஒண்ணும் இல்ல... கூட பெரிய மனுஷன் ஆயிட்டேப்பா.. வீட்டுல்ல அம்மா கேட்கிற அதே கேள்வியைத் தான் நீயும் கேட்கிறே"
"ஏன் அப்பா கேட்கிறது இல்லையா?
"ம்ம்ம் இருந்து இருந்தா அவரும் கேட்டு இருப்பார்..அவர் தான் அவசரமாப் போயிட்டாரே.."
அவள் குரல் மறுபடியும் கம்மியது. எனக்கு அது அதிர்ச்சியான செய்தி. கேசவன் அங்கிள் ரொம்ப ஜாலி டைப். எங்களுக்கு நல்ல பிரண்ட் மாதிரி. அவர் கூட சேர்ந்து அடிச்ச லூட்டிக்கு தனி பதிவே போடலாம்.
"எப்படி?" அந்த ஒரு வார்த்தை கஷ்ட்டப்பட்டு வாய் விட்டு வந்தது.
"ரெண்டரை வருஷம் ஆச்சு...ஒரு நாள் ராத்திரி...அது வேணாம் இப்போ..அன்னிக்கு அவ்வளவு அழுதேன் தெரியுமா? அப்போ எனக்கு உன் ஞாபகம் வந்துச்சு..என்னவோ தெரியல்ல..அப்பாவை நினைக்கும் போதெல்லாம் உன் நினைப்பும் சேர்ந்தே வரும்."
என்னாலே அதுக்கு மேல தாங்க முடியல்ல.
" நான் இப்போ சென்னை வந்தது கூட அப்பாவோட பங்ஷனுக்குத் தான்..இன்னைக்கு நான் அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்ப்பா.."
என் உதடுகள் அப்படியே துடிக்க ஆரம்பிச்சுடுச்சு..கஷ்ட்டப்பட்டு சாமாளித்தேன்.
"D...எனக்கு ரொம்ப சந்தோஷம்..உன் கூட பேசுனது..அதுவும் நீ என்னை ரஞ்சுன்னு கூப்பிட்டது கோடி சந்தோஷம்.. எங்க அப்பாவுக்கு பிறகு என்னை அப்படிக் கூப்பிடறது நீ மட்டும் தான்"
அது என்னமோ தெரியல்ல இந்த மாதிரி நேரத்திலே பேச்சை விட மௌனம் தான் அதிகமா கம்யுனிகேஷன்( Communication) பண்ண பயன்படுது. மௌனம்..அவ பேச்சுக்கு ம்ம்ம்...கொட்டியது என் மௌனம்... (கொஞம் Poeticaa இருக்கா இந்த Line.)
"ரஞ்சு... சொ இன்னைக்கு நீ வீட்டுக்கு டின்னருக்கு க்ட்டாயமா வர்றே....!"
"ப்ச்..ம்ம்ஹ்ம்...இல்லப்பா D...முடியாது..."
"ஏன்..?"
"நான் சிங்கப்புர் போறேன்..இப்போ ஏர்ப்போர்ட்ல்ல இருந்து தான் பேசுறேன்.."
" ஹேய் ரஞ்சு.. திஸ் இஸ் நாட் பேர்...( This is not fair)"
அவ கலகலன்னு சிரிச்சா அந்த பழைய கலங்கடிக்கிற சிரிப்பு..
"D.. அப்பாவும்... சரி நீயும் சரி எனனை விட்டு ரொம்ப தூரம் போயிட்டீங்கப்பா... நான் இனிமே உங்களைத் தேடக் கூடாதுப்பா...&**&*^%$%^ அவள் குரலில் இருந்த உண்ர்வு எனக்கு பிடிப்படவில்லை... மறுபடியும் செல் சொதப்பியது.... இந்த முறை நான் அலறவில்லை.. அவசரமாய் பாத்ரூம் போய் கதவைப் சாத்திக்கிட்டு சத்தம் போடாம அஞ்சு நிமிஷம் புல்லா அழுதேன்...
வெளீயே வரும் போது முகம் கழுவி பிரஷா வந்தேன்.. எனக்கும் என் செல்லத்துக்கும் இன்னும் 2 வாரத்திலே வெட்டிங் டே வருது... என்ன கிப்ட் கொடுக்கலாம் யாராவது ஐடியா கொடுங்களேன்.

27 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தேவ்நாத்,

தங்கிலீஷில் எழுதிக்கொண்டிருந்த நீங்கள் தமிழிலும் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள்!

நல்ல விதயம்.

உங்களுடைய கதையை தங்கிலீஷில் கஷ்டப்பட்டுப் படித்தேன். சினேகிதி 'டீஜே தமிழனின் படம் காட்டல்' வலைப்பதிவில் சுட்டி கொடுத்திருந்தார்.

தொடர்ந்து எழுதுங்கள்.

அப்படியே

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status

இங்கே ப்ளொக்கருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நிரலை(code)சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னூட்டங்கள் வந்தால் பிறர் தொடர்ந்து படிக்க ஏதுவாக இருக்கும்.

வாழ்த்துகளுடன்,
மதி

Pot"tea" kadai said...

எப்பா தேவ், அதான் கல்யாணம் ஆச்சு இல்ல...அப்புறம் என்னா பீலிங்ஸ். நான் இன்னமும் அந்த ஒரு "தொலைபேசி" அழைப்புக்கு தான் இன்னமும் கல்யாணம் பண்ணாமலே காத்திட்டு இருக்கேன்!:-)
நம்ம பாட்டு எப்பவுமே "இரு விழி உனது...இமைகளும் உனது..."

Unknown said...

Dep - Thanks for your support and appreciations.

மதி - தங்கள் வழிகாட்டுதல் எனக்கு பேருதவியாக உள்ளது.
தொடர்ந்து உங்கள் ஆதரவு நிச்சயமாக எனக்கு தேவை.
மிக்க நன்றி.....

Pot tea kadai - நல்ல பாட்டு... திருமணம் புரிந்து இணைந்து பாட என் வாழ்த்துக்கள்.

Dr.Srishiv said...

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னைக்கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்

கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னைக்காதலிக்க உன் தாய் மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்.....:)

ஸ்ரீஷிவ்...

மனதினை ஒரு நொடி பாரம் அழுத்திச்சென்றதென்னவோ உண்மை தோழா...ஒரு அழகி, ஒரு ஆட்டோகிராப் பார்த்த ஒரு உணர்வு...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்..

சினேகிதி said...

thaminglish ila irukumpothu kastapadu vasichen ippa thamilla podacha...kastapattu en thaminglish comment a vasinga DJ

Unknown said...

ஸ்ரீஷிவ்...

நற்றமிழ் ரசனைக்கு நன்றி...

வாசிப்பதற்கு தாங்கள் COMMENT எதுவும் போடவில்லையே... சினேகிதி

Unknown said...

//I have always enjoyed Dev's kirrukals.//

Thanks My friend

பொன்ஸ்~~Poorna said...

பொண்ணுங்க ஏமாத்திட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிகிட்டு போய்ட்டாங்கன்னு எழுதுவாங்க.. இது ரொம்பவே வித்தியாசமா இருக்கு.. சூப்பர்...

ILA (a) இளா said...

உண்மை, வெறுப்பு,ஆர்வம், காதல், பயம், பாசம், உயிர்..இறந்த காலம், நிகழ்காலம், வாழ்க்கை - 100%

Unknown said...

//பொண்ணுங்க ஏமாத்திட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிகிட்டு போய்ட்டாங்கன்னு எழுதுவாங்க.. //

அப்படியும் எழுதுறாங்களா பொன்ஸ் ? யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை என்பது என் கருத்து

//இது ரொம்பவே வித்தியாசமா இருக்கு.. சூப்பர்... //

நன்றி

Unknown said...

//உண்மை, வெறுப்பு,ஆர்வம், காதல், பயம், பாசம், உயிர்..இறந்த காலம், நிகழ்காலம், வாழ்க்கை - 100%//

சுருக்கமான நறுக் விமர்சனம் கொடுத்துள்ளீர்கள் நன்றி

Unknown said...

//உணர்ச்சிகளின் உச்சத்தில்
ஊமைகாயம் உறுத்தியதால்
ஊமையாகிப்போனேன்

வாழ்த்துக்கள் மிகவும் அருமை!!! //

வாங்க இலக்கியன்,

பக்கம் 78ல் இது உங்கள் முதல் கையெழுத்து என நினைக்கிறேன்.. தொடர்ந்து பக்கங்களைப் புரட்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சீனு said...

Really gr8 ... kathai romba romba nalla irukkunga...

வந்தியத்தேவன் said...

வணக்கம் தேவ் இது கதைபோல் தெரியவில்லை நடந்த சம்பவம் போல் தெரிகிறது கவிதைத்தனமான எழுத்து வாழ்த்துக்கள்
தமிழன் ஈழம்

வந்தியத்தேவன் said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

வாங்க தமிழன் உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி

MyFriend said...

மனதில் பூட்டி வைச்ச அந்த முதல் காதல்.. எப்போதும் வலி.. அழகா சொலியிருக்கீங்க. இது உண்மை கதையா?

Unknown said...

//மனதில் பூட்டி வைச்ச அந்த முதல் காதல்.. எப்போதும் வலி.. அழகா சொலியிருக்கீங்க. இது உண்மை கதையா? //

கதைகள் எல்லாம் வாழ்க்கையின் பிம்பங்கள் அப்படிங்கறதை நீங்க ஒத்துகிட்டா இதுவும் ஒரு உண்மைக் கதையே :)

Anonymous said...

ஒரு பக்கம் காதலி ஒரு பக்கம் மனைவி.இவர்களின் நினைவில் ஒரு பரிதவிப்பு...தேவ் இது உண்மையில் அருமை.உங்கள் கதையில் வரும் உணர்ச்சிப் பூர்வமான அந்த பகுதிகள் எல்லாம் அப்படியே நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு.நீங்கள் நல்ல எழுத்தாளர்தான்!

வந்தியத்தேவன் said...

வணக்கம் தேவ் என்ன என் கதையை அப்படியே எழுதியிருக்கிறீர்கள் பெயர்களும் கேசவன் அங்கிளும் தான் வித்தியாசம். சில நாட்களுக்கு முன் என் முன்னாள் காதலி எனக்கு கால் பண்ணியிருந்தார் உங்கள் மன நிலையில்தான் நானும் இருந்தேன் ஒரு வித்தியாசம் எனக்கு இன்னமும் மனைவி இல்லை. என் முன்னால் காதலியும் மூன்றரை வருடம் கழித்து வந்துள்ளார். ஆனால் நான் சந்திக்கவில்லை. கதைத்தது மட்டும்தான் சந்திக்க மனம் கஸ்டப்படுகிறது. BTW அவளுக்கும் இன்னமும் திருமணம் நடக்கவில்லை.

கதைகள் கற்பனைகள் அல்ல நடந்த சம்பவங்களின் ஒரு பிரதிபலிப்பு.
வாழ்த்துக்கள் தேவ். இன்னும் நிறைய எழுதுங்கள்.

வந்தியத்தேவன் - ஈழம்

வந்தியத்தேவன் said...

வணக்கம் தேவ் என்ன என் கதையை அப்படியே எழுதியிருக்கிறீர்கள் பெயர்களும் கேசவன் அங்கிளும் தான் வித்தியாசம். சில நாட்களுக்கு முன் என் முன்னாள் காதலி எனக்கு கால் பண்ணியிருந்தார் உங்கள் மன நிலையில்தான் நானும் இருந்தேன் ஒரு வித்தியாசம் எனக்கு இன்னமும் மனைவி இல்லை. என் முன்னால் காதலியும் மூன்றரை வருடம் கழித்து வந்துள்ளார். ஆனால் நான் சந்திக்கவில்லை. கதைத்தது மட்டும்தான் சந்திக்க மனம் கஸ்டப்படுகிறது. BTW அவளுக்கும் இன்னமும் திருமணம் நடக்கவில்லை.

கதைகள் கற்பனைகள் அல்ல நடந்த சம்பவங்களின் ஒரு பிரதிபலிப்பு.
வாழ்த்துக்கள் தேவ். இன்னும் நிறைய எழுதுங்கள்.

வந்தியத்தேவன் - ஈழம்

Unknown said...

//ஒரு பக்கம் காதலி ஒரு பக்கம் மனைவி.இவர்களின் நினைவில் ஒரு பரிதவிப்பு...தேவ் இது உண்மையில் அருமை.உங்கள் கதையில் வரும் உணர்ச்சிப் பூர்வமான அந்த பகுதிகள் எல்லாம் அப்படியே நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு.நீங்கள் நல்ல எழுத்தாளர்தான்! //

வாங்க துர்கா முதல் தடவையா நம்ம பதிவுக்கு வந்துருக்கீங்க.. நல்ல எழுத்தாளர்ன்னு வேற பாராட்டிட்டீங்க.. ரொம்ப நன்றிங்க.. நேரம் கிடைக்கும் போது பக்கம் 78இன் பிற பதிவுகளையும் பாருங்க... கருத்துச் சொல்லுங்க...

Unknown said...

//வணக்கம் தேவ் என்ன என் கதையை அப்படியே எழுதியிருக்கிறீர்கள் பெயர்களும் கேசவன் அங்கிளும் தான் வித்தியாசம். சில நாட்களுக்கு முன் என் முன்னாள் காதலி எனக்கு கால் பண்ணியிருந்தார் உங்கள் மன நிலையில்தான் நானும் இருந்தேன் ஒரு வித்தியாசம் எனக்கு இன்னமும் மனைவி இல்லை. என் முன்னால் காதலியும் மூன்றரை வருடம் கழித்து வந்துள்ளார். ஆனால் நான் சந்திக்கவில்லை. கதைத்தது மட்டும்தான் சந்திக்க மனம் கஸ்டப்படுகிறது. BTW அவளுக்கும் இன்னமும் திருமணம் நடக்கவில்லை.//

தயக்கம் வேண்டாம் சந்தியுங்கள்.... நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள் :)

//கதைகள் கற்பனைகள் அல்ல நடந்த சம்பவங்களின் ஒரு பிரதிபலிப்பு.
வாழ்த்துக்கள் தேவ். இன்னும் நிறைய எழுதுங்கள்.//
நன்றி தமிழன்

வந்தியத்தேவன் - ஈழம்

நவீன் ப்ரகாஷ் said...

கொட்டிய மெளனம் எனக்குள்ளும் தேவ் !!
படித்து முடித்த பின்னும் இன்னும் ....

உணர்வுகளை உணர்த்தியிருக்கிறீர்கள் மிக ஆழமாக. வாழ்த்துக்கள் !!

Unknown said...

வாங்க நவீன்,

பின்னூட்டத்திலும் உங்கள் வார்த்தைகளில் கவி மணம் வீசுகிறதே.. நன்றி நவீன்.

சந்தனமுல்லை said...

நல்லா இருக்கு..ஃபீலிங்கா!
ஆனா, நீங்க ஃபீல் பண்ணீங்கம்ன்னு உங்க மனைவிக்கு தெரிஞ்சா அவங்க ரொம்ப ஃபீல் பண்ண மாட்டாங்களா..?

valli said...

Very well written ...emotions penned well👏👏🌹