ஆட்டோகிராப்
யார் யாரோ நீட்டிய ஆட்டோகிராப் புத்தகத்தில்
என்ன என்னவோ எழுதி...
கையெழுத்து போட்டு கொடுத்தாய்
நான் நீட்டிய புத்தகத்தில் மட்டும்
இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு கொடுத்தாய்..
_______________________________________________
எனக்குப் பிடித்த மழை..
குளித்து முடித்த
உன் கூந்தல் மேகத்தில் இருந்து
தெறித்து விழுந்து
என் முகம் நனைக்கும்
அந்த சில நொடி மழை...
_____________________________________________________
ஞாபகம்...
மழையிலே அழுதா..
எனக்கு தெரியாதா..
கண்ணைப் பார்...
கண்ணீர் துடைக்க நீ கொடுத்த...
கைக்குட்டையில்..பத்திரமாய்...
இன்னும் உன் விரல் வாசனை...
__________________________________________________________
கோலங்கள்
ஊரே...
மழை வரப் போகுதுன்னு
ஆரவாரம் செய்ய...
என் முகத்தில் மட்டும் கவலை ரேகைகள்...
உன் வீட்டு வாசலில்
நீ போட்ட வண்ண பூக்கோலம்...
4 comments:
நன்றி ரூபா.
அடடாh..! அழகிய மழைக்கால காதல் கவிதைகள்.
நான் நீட்டிய புத்தகத்தில் மட்டும்
இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு கொடுத்தாய்..
என் முகம் நனைக்கும்
அந்த சில நொடி மழை...
என் முகத்தில் மட்டும் கவலை ரேகைகள்...
உன் வீட்டு வாசலில்
நீ போட்ட வண்ண பூக்கோலம்...
அருமை
அழகான வரிகள்
அன்புட்ன்
கீதா
நளாயினி,கீதா,
உங்கள் ரசனைக்கு
நன்றி.
Post a Comment